கழுதைகளைத் தினமும் கட்டவிழ்த்து விடும் ஊடகங்கள்!
கழுதை சென்று பக்கத்து விவசாயியின் நிலத்தில் வளர்ந்திருந்த பயிர்களை அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயியின் மனைவி கழுதையை சுட்டுக் கொன்றாள்.
கழுதையின் உரிமையாளருக்கு அதன் மரணம் பேரிழப்பாக அமைந்தது. இதனால் கோபமடைந்த உரிமையாளர் விவசாயியின் மனைவியை சுட்டுக் கொன்றார்.
மனைவியின் மரணத்தால் கோபமடைந்த விவசாயி ஒரு அரிவாளை எடுத்து கழுதையின் உரிமையாளரை வெட்டிக் கொன்றார்.
இதனால் மிகவும் கோபமடைந்த கழுதையின் உரிமையாளரின் மனைவி மற்றும் அவரது மகன்களும் விவசாயியின் வீட்டிற்கு தீ வைத்தனர்.
விவசாயி, தனது வீட்டை சாம்பலாக மாற்றிய கழுதையின் உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களைக் கொன்றார்.
கடைசியாக, விவசாயி வருத்தத்துடன் "நீ ஏன் அனைவரையும் கொன்றாய்?" எனப் பேயைக் கேட்டார்.
பேய் பதிலளித்தது, "நான் யாரையும் கொல்லவில்லை, ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஒரு கழுதையை மட்டுமே நான் விடுவித்தேன். பிசாசுகளை உங்களுக்குள் விடுவித்தது நீங்கள் அனைவரும் தான், அதன் பின்னர் ஏற்பட்ட மோசமான எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்தது நீங்கள் தான்."
இன்றைய ஊடகங்கள் அந்த பேய் போன்றது. இது தினமும் கழுதைகளை விடுவிக்கிறது. மக்கள் அதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள், சுய சிந்தனை இல்லாமல் ஒருவருக்கொருவர் வாதிடுகிறார்கள், ஒருவருக்கொருவர் காயப்படுத்திக் கொள்ளுகின்றனர்.
இறுதியில், ஊடகங்கள் தமது அனைத்து பொறுப்புகளையும் மறந்து மக்களை ஏமாற்றுகின்றன.
எனவே, ஊடகங்கள் வெளியிடும் ஒவ்வொரு கழுதை மீதும் எதிர்வினையாற்றாமல் இருப்பது நமது பொறுப்பு, எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூகத்துடனான எங்கள் உறவை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
தமிழில்-நா.இராஜமனோகரன்
No comments:
Post a Comment