Thursday, January 25, 2018

சொல் முருகா!

நீ நின்ற இடமெல்லாம்
   நிறைவு தான்-என் முருகா!

நீ தந்த தமிழெங்கும்
   சிறப்புத் தான்-என் முருகா!

நீ கூட இருக்கையிலே
  பய மில்லை-என் முருகா!

நீ மயிலேறி வருகையிலே
  வனப்புத் தான்-என் முருகா!

நீ வந்து தேர் ஏற
  ஊர் சிலிர்க்கும்-என் முருகா!

நீ சுற்றும் இடமெல்லாம்
  மணம் கமிழும்-என் முருகா!
          
ஆனாலும்!
நீ இன்றி இவ்வுலகில்

  யார் எனக்கு-சொல் முருகா!