நீ நின்ற இடமெல்லாம்
நிறைவு தான்-என்
முருகா!
நீ தந்த தமிழெங்கும்
சிறப்புத் தான்-என் முருகா!
நீ கூட இருக்கையிலே
பய மில்லை-என்
முருகா!
நீ மயிலேறி வருகையிலே
வனப்புத் தான்-என் முருகா!
நீ வந்து தேர் ஏற
ஊர் சிலிர்க்கும்-என்
முருகா!
நீ சுற்றும் இடமெல்லாம்
மணம் கமிழும்-என்
முருகா!
ஆனாலும்!
நீ இன்றி இவ்வுலகில்
யார் எனக்கு-சொல்
முருகா!