Thursday, June 1, 2017

நாம் அழுதது இதற்கல்ல...!

நாம் அழுதது இதற்கல்ல

...
எங்கள்
கண்ணீர்
இப்படியா கருக்கொள்ள வேண்டும்!
நாம் அழுதது...
நீதிக்காய்!
நிம்மதிக்காய்!
விடுதலைக்காய்!
பால் வேண்டி அழுத
பிள்ளையின் பசிக்காய்...
தாயின் படுகொலைக்காய்...
காணாமல் ஆன எங்கள் காளையர்க்காய்...
வெளிச் சொல்ல முடியாது கதறியழும் சகோதரிக்காய்...!
கார் முகிலே
கழன்று விடு...
நீதி இதுவல்ல
நிர்க்கதிதான் பதில் இல்லை...!
ரணம் கொண்ட
வலி தெரியும்!
உறவழிந்த
உணர்வு புரியும்!!
பசி கொண்ட பிஞ்சின்
கதறல் புரியும்!
வேண்டாம் விலகிடு...!
வற்றிவிடு...!
வசந்தம் கொடு...!
வாழ்விற்கு வழி சமை...!

நாம் அழுதது இதற்கல்ல...!!!