Tuesday, August 8, 2017

உலக பழங்குடிகள் நாள் - 2017

2017 கருப்பொருள்(Theme):

பழங்குடி மக்கள் உரிமைகள் மீதான ஐ.நா.பிரகடனத்தின் 10 வது ஆண்டுவிழா..
(10th Anniversary of the UN Declaration on the Rights of Indigenous Peoples.)

உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டு ஆவணி (ஓகஸ்ட்) 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மார்கழி (டிஸ்சம்பர்)1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தொல்பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

உலகின் 90 நாடுகளில் வாழ்கின்ற 37 கோடி(370 million) பழங்குடியின மக்களின் உரிமைகளும், கலாச்சாரங்களும், பாரம்பரிய நிலங்களும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் இத்தினம் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
உலகின் மொத்த ஏழைகளில் 15 வீதத்தினர் பழங்குடியினராக உள்ளனர் என, ஐ.நா. கூறியுள்ளது.
உலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள ஏழாயிரம் மொழிகளில், பெரும்பாலான மொழிகள், பழங்குடியினத்தவரால் பேசப்படுகின்றன என்றும், இவர்கள் ஐந்தாயிரம் விதமான பலதரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஐ.நா. கூறியுள்ளது.
2007ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, ஐ.நா.பொது அவை, பழங்குடியினத்தவரின் உரிமைகள் பற்றிய உலகளாவிய அறிக்கையை உருவாக்கியது. இதன் பத்தாம் ஆண்டு நினைவு இவ்வாண்டில் கடைப்பிடிக்கப்படுகின்றது.