Wednesday, April 30, 2014

பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்...

தமிழர்  கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவம் பட்டிமன்றம் ஆகும். முரண்பாடான பலநோக்களை உடைய கருத்துக்களை விபரிக்க, விவாதிக்க, பரப்புரைக்க பட்டிமன்றங்கள் உதவுகின்றன. 

வன்முறையற்ற, பண்புபட்ட முறையில், கருத்துக்களையும் பேச்சு திறனையும் முன்வைத்து, சிக்கலான பிரச்சினைகளை அலச இவை உதவுகின்றன.

மிழுக்குச் சிறப்பு "'கரம் போன்றது, பேச்சுக் கலைக்குப் பட்டிமன்றம். இலக்கிய வழக்கில் 

இது "பட்டிமண்டபம்' எனக் குறிக்கப்பெறுகின்றது.



"பட்டிமன்றம்' என்ற சொல் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், கம்பராமாயணம் ஆகிய பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் இச்சொல் பெயரளவில் இடம்பெற்றுள்ளது.

மணிமேகலையில், "பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்' என வருகின்றது. எனவே பட்டிமண்டபத்துக்கு என்று ஏதோ ஒரு நெறிமுறை அல்லது விதி இருந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

திருவாசகத்தில், "பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே' எனக் குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசகர்.

இதனால் பட்டிமண்டபத்தில் ஏறுவதற்குத் தகுதி வேண்டும் என்பது புலனாகின்றது.

கம்பராமாயணத்தில், "பன்ன அரும் கலைதெரி பட்டி மண்டபம்' என இடம்பெற்றுள்ள குறிப்பு, அரிய கலைகளை ஆராய்வதற்கு உரிய இடம் பட்டிமண்டபம் என்பதை உணர்த்துகின்றது. இங்ஙனம் பட்டிமண்டபம் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களிலேயே இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்டிமன்றம் தொடக்க காலத்தில்,

பட்டிமன்றத்தின்வளர்ச்சி1

*சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம் என்றாற்போல்  இலக்கியத்தைப் பொருளாகக் கொண்டு நடைபெற்றது.

பட்டிமன்றத்தின்வளர்ச்சி2

*பட்டிமன்றத் தின் அடுத்த செல்நெறி சமூகத்தைப் பற்றியதாக அமைந்தது;

பட்டிமன்றத்தின்வளர்ச்சி3

*பட்டிமன்றத்தின் மூன்றாம் பரிமாணமாக குடும்பம் அமைந்தது.
கணவனா?  மனைவியா?,  தாயா? தாரமா?, மகனா? மகளா?, பிறந்த வீடா, புகுந்த வீடா? என்றாற்போல் குடும்பங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் நகைச்சுவையோடு பட்டிமன்றங்களில் விவாதிக்கப் பெற்றன
.

பட்டிமன்றத்தின்வளர்ச்சி4

*பட்டிமன்றத்தின் நான்காம்கட்ட வளர்ச்சி சினிமாவை மையமிட்டு அமைந்தது. கண்ணதாசனா, பட்டுக்கோட்டையா? பழைய பாடலா? புதிய பாடலா? என்றாற்போல் சினிமா தொடர்பான செய்திகள் பட்டிமன்றங்களில் அலசப் பெற்றன.

பட்டிமன்றத்தின்வளர்ச்சி5

*பட்டிமன்ற வரலாற்றில் ஐந்தாம்கட்ட வளர்ச்சிப் போக்கு விழிப்புணர்வுச் சிந்தனை ஆகும். வாழ்க்கையில் முன்னேறப் பெரிதும் துணைபுரிவது திறமையா, அதிர்ஷ்டமா?, வாழ்க்கைப் பயணத்தில் திருமணம் சறுக்குப் பாதையா, திருப்பு முனையா?, சாலவும் நன்று எது? ஆலயம் தொழுவதா, நூலகம் செல்வதா?, வாழ்க்கையின் வரம் நண்பர்களா, நூல்களா?, எதிர்காலம் என்ற பெயரில் பெற்றோர்கள் குழந்தைகளை வதைக்கிறார்களா? விதைக்கிறார்களா?, என்றாற் போல் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டக்கூடிய தலைப்புக்களில் பட்டிமன்றங்கள் அமைந்தன.
செய்தி/தகவல், பொழுதுபோக்கு என்றும் இரண்டும் சேர்ந்த ஆக பட்டிமன்றம் இக்காலகட்டத்தில் வளர்ந்தது.

பட்டிமன்றம் சில நேரங்களில் பாட்டுமன்றமாகவும் மாறிவிட்டது.

கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதுபோல் கடைக்கோடி மனிதனுக்கும் இதிகாசங்களின் மற்றும் தமிழ் இலக்கியங்களின் சுவையான செய்திகளைக் கொண்டுசேர்த்தது, மக்கள் இடையே நகைச்சுவை உணர்வை வளர்த்தது, விழிப்புணர்வை ஊட்டியது எனப் பட்டிமன்றங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பட்டிமன்றம் வளர்த்த தமிழ் என்பது பல்வேறு பரிமாணங்களில் விரிவாகவும் முழுமையாகவும் ஆராயத்தக்க ஒரு பொருள் ஆகும்.

பட்டிமன்றத்தின் பிறிதொரு வடிவம்வழக்காடு மன்றம்” ஆகும். பட்டிமன்றத்தில் இரண்டு அணிகள் இருக்கும்; அணிக்கு இருவர் அல்லது மூவர் எனப் பேச்சாளர்கள் இடம்பெறுவர். வழக்காடு மன்றத்திலோ வழக்குத் தொடுப்பவர் என ஒருவர், அதை மறுப்பவர் என இன்னொருவர் என இரு பேச்சாளர்களே இடம்பெறுவர்.

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பட்டிமன்றங்கள் இரவு நேரப் பல்கலைக்கழகங்கள் போல! அதனைக் கேட்க வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இலக்கிய இன்பம் பெறுவார்கள்! தங்கள் கவலைகளை எல்லாம் மறந்து சிரித்து மகிழ்வார்கள்!



குறிப்பு 1

கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ
றிட்ட அன்பரொ டியாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண்டும்அறி யேனையே.

பதப்பொருள் :
ஏற்றினை - இடப வாகனத்தை உடைய நீ
கட்டறுத்து - பாசங்களை ஒழித்து
எனை ஆண்டு - என்னை அடிமை கொண்டு
எட்டினோடு இரண்டும் அறியேனை - எட்டினோடு இரண்டின் பொருளையறியாத என்னை,
நீறு இட்ட - திருநீற்றை அணிந்த
அன்பரொடு - உன்னடியாரோடு
யாவரும் - எல்லாரும்
கண்ணார காண - கண்ணாரக் காணும்படி
பட்டி மண்டபம் - இடமகன்ற உன் திருவோலக்க மண்டபத்தில்
ஏற்றினை - ஏறச் செய்தாய்.

விளக்கம் : நீறிட்ட அன்பர் சிவனடியாராவர், 'கண்ணாரக் காண' எனக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. எட்டு என்னும் எண் தமிழில் '' என்றும், 'இரண்டு' என்னும் எண், '' என்றும் எழுதப்படும். ஆகையால், அகர உகரங்களை, 'எட்டும் இரண்டும்' என்றார். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதைக் குறிப்பிடுவார், 'எட்டினோடிரண்டும் அறியேனையே' என்றார்.
இனி, 'எட்டினோடு இரண்டும்' என்றதற்குப் பத்து என்றும், அதாவது,  - உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு. , என்னும் எழுத்தையும் கல்லாதவர் என்ற பொருளும் உண்டு. 'பட்டி மன்றம்' என்றதற்கு வாதசபை என்றும் பொருள் கொண்டு, 'அறிவில்லாத என்னை அறிஞர் அவையிலே ஏறச் செய்தாய்' என்று கூறுதலும் ஒன்று.
இதனால், இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர், ஒன்றுக்கும் பற்றாத சிறுமையுடைதாயிருந்தும் பெருமை பெறும் என்பது கூறப்பட்டது.

குறிப்பு 2

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்  

பதப்பொருள் :
மன்னவர்  தரு   திறை   அளக்கும்   மண்டபம் -   (மன்னர்மன்னனாகிய   அயோத்தி  வேந்தனுக்கு   அடங்கிய)     
சிற்றரசர்கள் செலுத்தும் கப்பத்தை எண்ணி  
அளவிடும் மண்டபங்களும்;   


அன்னம் மென்   நடையவர்   ஆடு   மண்டபம்     
அன்னம்  போன்றநடையையுடைய நடன மாதர்கள்  நடனம்   
ஆடும்    மண்டபங்களும்; 


உன்னரும்  அருமறை  ஓதும்  மண்டபம்   
நினைப்பதற்கும்அரியனவான சிறந்த வேதங்களை வல்லோர்  
ஓதும்    மண்டபங்களும்; 


பன்னரும் கலைதெரிபட்டி மண்டபம் - சிறப்பித்துப்   பேசுவதற்கும்அரியனவான பல கலைகளையும்    
அறிஞர்கள்    ஆராயும்   பட்டிமண்டபங்களும் (அயோத்தி நகரெங்கும் இருந்தன).

அரசியல்   கடமைகள். கலைத் துறைப் பணிகள். 
 சமயத்  தொண்டு.அறிவு  நலம் வளர்க்கும் ஆய்வு 
ஆகப் பலவற்றுக்கும்   அயோத்தியில்வெவ்வேறு   
மண்டபங்கள்   இருந்தன   என்பது   
கவிஞர்   செய்தி. 



No comments:

Post a Comment