Friday, October 6, 2023

 சிறுவர் தினத்து பரிசாய் வேண்டும்..!



பாட்டி சொன்னா கூடி இருந்து கூழ் குடித்ததை!
பாட்டா சொன்னார் தோளில் சுமந்து கோயில் சென்றதை!
அடுத்த வீட்டு அன்ரியும் சொன்னா அப்படியெல்லாம் நடந்திருப்பதை!
அதிசயத்தோடு நானும் கேட்டேன் அலாவுதீனின் அற்புத கதை போல்!
முகத்தைப் பார்த்து கதைக்க இங்க முதுகுத்தண்டு விடுகுது இல்ல.
முகத்தை கொஞ்சம் மேலே தூக்க கருந்துளை போல கவருது 'போன்' தான்!
எம்மை!,
வீட்டில் தூக்கி ஸ்கூட்டியில் வைத்தால் பள்ளிக்கூடத்தில் கொண்டே பறிப்பு!
பள்ளிக்கூடத்தில் தூக்கி வைத்தால் டியூஷன் வகுப்பில் மீண்டும் பறிப்பு!
வாழ்க்கை ஒரு வட்டம் ஒன்று வாத்தியார் சொல்ல கேள்விப்பட்டன்!
இரண்டு புள்ளிக்குள் ஒடுங்கி இங்க இரண்டறக் கலந்தது எமது வாழ்க்கை!
ஓடி விளையாட நேரமில்லை கூடிக் கதைக்க ஆளும் இல்லை!
அம்மா அப்பா கூட கதைக்க,
அவைக்கு கூட நேரமில்லை!
100 மார்க்கை எட்டிப்பிடிக்க அம்மா ஸ்கூட்டியில் என்னைத் துரத்த!
அப்பா போனில் அடிக்கடி துரத்த!
வகுப்பு டீச்சர் வார்த்தையால் துரத்த!
சிறுவர் பருவத்தை சிதறவிட்டு
ஆடி காற்றில் அறுந்த பட்டமாய் அங்க இங்க அலையுது வாழ்க்கை!
சிறுவர் உலகை புரிய எவற்கும்
சிறுவர் தினம் போதவே போதா!
எமக்கு!
நேரம் இருக்கிற அப்பா வேணும்!
புள்ளியைத் துரத்தா அம்மா வேணும்!
அன்பைக் கொடுக்கும் ஆசான் வேணும்!
வீட்டில் பாட்டி இருக்க வேணும்!
பாட்டா கூட வாழ வேணும்!-எமக்கும்
கூடியிருந்து கூழ் குடிக்கும் காலம் ஒன்று கூடி வரோணும்!
கூடியிருக்கும் குடும்பம் வேணும்!
குதுகலிக்கும் இல்லம் வேணும்!
ஓடிவிளையாட மாலை வேணும்!
இவை தான் எமக்கு,
சிறுவர் தினத்துப் பரிசாய் வேணும்!!
பரிசாய் இதுவே எமக்கு வேணும்!!

நா.இராஜமனோகரன்
01Oct 2023

Thursday, June 9, 2022

இந்தியாவில் காட்சிகளுக்கான அங்கிகாரம்...

இந்தியா சுதந்திரம் அடைந்து 2022ம் ஆண்டுடன் 75வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது. இந்தியா பல கட்சிமுறை கொண்ட நாடு.இங்கு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இரண்டு விதமானவை.
1.தேசியக் கட்சி
2.மாநிலக் கட்சி

மாநிலக் கட்சியாக அங்கிகாரம் பெறவேண்டுமாயின் பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அ)
  01.தொடர்ந்து ஐந்து வருடங்கள் அரசியல் செயற்பாடு.
  
  02.மக்கள் பிரதிநிதிகள் அவையில் ஒவ்வொரு 25 உறுப்பினர்களுக்கும் ஒரு உறுப்பினர் என்ற             விகிதத்தில் உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.

 03.சட்டப் பேரவையில் ஒவ்வொரு 30  உறுப்பினர்களுக்கும் ஒரு   உறுப்பினர் என்ற  விகிதத்தில்          உறுப்பினர் இருக்க வேண்டும்.

ஆ)
  
01.சட்டப்பேரவைக்கு    நடைபெற்ற  தேர்தலில்   மொத்தம் பதிவான  வாக்குகளில்,                                 செல்லுபடியாகும்   வாக்குகளில்  நான்கு சதவீதமானது   வேட்பாளர் பெற்றிருக்கவேண்டும்.
     
  02.ஒரு தொகுதியில் போட்டியிட்ட பிரதான கட்சியின் வேட்பாளருக்கு அத்தொகுதியில் பதிவான
       வாக்குகளில் செல்லத்தக்க வாக்குகளில் 1/12 பங்கு  கிடைக்கவில்லையெனில்  அந்த                       வாக்குகள்  கணக்கில்   எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
  
  03.தேர்தலில் வென்ற     வேட்பாளர்   தேர்தலுக்கு பின் வேறொரு கட்சியில்   சேர்ந்தால்                           அவ்வுறுப்பினர்  பெற்ற  வாக்குகள்   கணக்கில்    சேர்க்கப்படுவதில்லை.

மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கொண்டுள்ள கட்சி நான்கு மாநிலங்களில் அங்கிகாரத்திற்கு தகுதி பெறுமாயின் அது "தேசியக்கட்சி"யாக அங்கிகரிக்கப்படும். 

நா.இராஜமனோகரன்
09 ஜூன் 2022   

Tuesday, June 22, 2021

கழுதைகளைத் தினமும் கட்டவிழ்த்து விடும் ஊடகங்கள்!



ஒரு கழுதை ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது.  ஒரு இரவு ஒரு பேய் கயிற்றை வெட்டி கழுதையை விடுவித்தது.

கழுதை சென்று பக்கத்து விவசாயியின் நிலத்தில் வளர்ந்திருந்த பயிர்களை அழித்தது.  இதனால் ஆத்திரமடைந்த விவசாயியின் மனைவி கழுதையை சுட்டுக் கொன்றாள்.
கழுதையின் உரிமையாளருக்கு அதன் மரணம்  பேரிழப்பாக அமைந்தது. இதனால் கோபமடைந்த உரிமையாளர்  விவசாயியின் மனைவியை சுட்டுக் கொன்றார்.

மனைவியின் மரணத்தால் கோபமடைந்த விவசாயி ஒரு அரிவாளை எடுத்து கழுதையின் உரிமையாளரை வெட்டிக் கொன்றார்.

இதனால் மிகவும் கோபமடைந்த கழுதையின் உரிமையாளரின் மனைவி  மற்றும் அவரது மகன்களும் விவசாயியின் வீட்டிற்கு தீ வைத்தனர்.

விவசாயி, தனது வீட்டை சாம்பலாக மாற்றிய கழுதையின் உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களைக் கொன்றார்.

கடைசியாக, விவசாயி வருத்தத்துடன்   "நீ ஏன் அனைவரையும் கொன்றாய்?" எனப் பேயைக் கேட்டார்.

பேய் பதிலளித்தது, "நான் யாரையும் கொல்லவில்லை, ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஒரு கழுதையை மட்டுமே நான் விடுவித்தேன். பிசாசுகளை உங்களுக்குள் விடுவித்தது நீங்கள் அனைவரும் தான், அதன் பின்னர் ஏற்பட்ட மோசமான எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்தது நீங்கள் தான்."

இன்றைய ஊடகங்கள் அந்த பேய் போன்றது.  இது தினமும் கழுதைகளை விடுவிக்கிறது.  மக்கள் அதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள், சுய சிந்தனை இல்லாமல் ஒருவருக்கொருவர் வாதிடுகிறார்கள், ஒருவருக்கொருவர் காயப்படுத்திக் கொள்ளுகின்றனர்.

இறுதியில், ஊடகங்கள் தமது அனைத்து பொறுப்புகளையும் மறந்து மக்களை ஏமாற்றுகின்றன.  

எனவே, ஊடகங்கள் வெளியிடும் ஒவ்வொரு கழுதை மீதும் எதிர்வினையாற்றாமல் இருப்பது நமது பொறுப்பு, எங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூகத்துடனான எங்கள் உறவை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

தமிழில்-நா.இராஜமனோகரன்

Monday, June 21, 2021

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 

 ஒரு   சிறு விளக்கம்!



அமெரிக்க ஜனாதிபதியை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை என்னால் முடிந்தளவு இலகுவாக விளக்க முயற்சிக்கிறேன்.

உலகில் தேர்தல் முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுபது போல அமெரிக்க தேர்தல் முறையும் வேறுபடுகின்றது. இதில் தேர்தல் கல்லூரி(Electoral College) என்ற சொற்பதம் தான் சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்துவது.

நாம் இங்கு தேர்தல் வாக்குகளின்(Electoral Votes) தன்மை எவ்வாறு அமைகின்றது எனப் பார்ப்போம்,

       Representatives                  435
       Senators(50×2)                   100
       Federal District columbia.  03 (23வது அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் முக்கியமான விடயங்களை கையாளும் பகுதியாதலால் தேர்தல் கல்லூரியில் 03 ஆசனங்கள் வழங்கப்பட்டது)
மொத்தமாக 538 Electoral Votesக் கொண்டதாக காணப்படுகின்றது.

இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் தேர்வாளர்கள் அமெரிக்க மாகாண அளவில் மேற்கொள்ளப்படும் சனத்தொகை கணக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றனர்.இந்த கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவதுடன், சனத்தொகை மாற்றத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளின் எண்ணிக்கை கூடிக்குறையலாம்.

இங்கு,அமெரிக்க தேர்தல் கல்லூரி(Electoral College) முறை அதன் வரலாற்று வேர்களுக்கூடாக உருப்பெறுகிறது, ஏனெனில் இது பொதுவாக மக்களின் வாக்குகளை மறைமுகமாக பிரதிபலிக்கிறது.

அதுமட்டுமன்றி சிறிய மாநிலங்களுக்கும் அதிக வலுவை அது கொடுக்கிற நடைமுறையை காணக் கூடியதாக உள்ளது.இதன் மூலம் சிறிய மாநிலங்களுக்கும் அரசியலமைப்பினூடாக அதற்குரிய மதிப்புகளை வழங்கி மற்றைய மாநிலங்களுடன் சிறிய மாநிலங்களையும் சமன் செய்கிறது.

உதாரணமாக, மிகப்பெரிய மாநிலமான Californiaவில் அமெரிக்க மக்கள் தொகையில் 12.03% மக்கள் உள்ளனர், ஆனால் அதற்கு 55 தேர்தல் கல்லூரி வாக்குகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தேர்தல் கல்லூரி மொத்தத்தில் 10.22% மட்டுமே.

குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமான Wyoming அமெரிக்க மக்கள் தொகையில் 0.18% கொண்டுள்ள போதும்  தேர்தல் கல்லூரியில் அதன் மூன்று இடங்களுக்கும் கல்லூரி வாக்குகளில் 0.56% வாக்குகளை வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

தேர்தல் கல்லூரி முறை என்பது ஒரு வேட்பாளர் நாடு முழுவதும் இருந்து தனக்குரிய வாக்குகளைப் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு தேர்தல் கல்லூரிகளின் வாக்குகளே அமெரிக்க ஜனாதிபதியை தீர்மானிக்கும்.

இதற்கு தேர்தல் கல்லூரி வாக்குகளில் 270 மேல் ஒரு வேட்பாளர் பெறவேண்டியது அவசியமாகின்றது.

உதாரணமாக Texasஐ  எடுத்துக்கொண்டால் மக்கள் தொகை 28,995,881.Texas ஒதுக்கப்பட்ட தேர்தல் கல்லூரி வாக்குக்கள்(Electoral Votes)36 மற்றும் மேலவை உறுப்பினர் வாக்குகள்(Senators Votes)02 மொத்த வாக்குகள் 38.இங்கு,ஒரு தேர்தல் கல்லூரி வாக்காளர் ஏறத்தாள 664,000 மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

South Dakota ஐ எடுத்துக்கொண்டால் அதன் மக்கள் தொகை  884,659.அதற்கான தேர்தல் கல்லூரி வாக்கு 01 மற்றும் மேலவை உறுப்பினர் வாக்கு 02.இவ் மாநிலத்தின் மொத்த மக்களையும் பிரதிநிதித்துவ படுத்தும் பிரதிநிதிகள் மூன்று.இங்கு ஒரு பிரதிநிதி 294,800 மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

மேலும்,அமெரிக்காவில் தேர்தல் கல்லூரியால் அதிகளவு ஒதுக்கப்பட்ட  ஆசனங்களைக் கொண்ட மாநிலங்களாக
01.California-53+2=55
02.Texas-36+2=38
03.Florida-27+2=29
04.New York-27+2=29
05.Illinois-18+2=20
06.Pennsylvania-18+2=20
07.Ohio-16+2=18
08.Georgia-14+2=16
09.Michigan-14+2=16
10.North Carolina-13+2=15
11.New Jersey-12+2=14
12.Virginia-11+2=13
13.Washington-10+2=12 ஆகியவை காணப்படுகின்றன.

அதிக ஆசனங்களைக் கொண்ட மாநிலங்கள் முதல் பத்தையும் குறிவைத்து ஒரு அதிபர் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களை கவர்ந்தால் இலகுவாக வெற்றிக் கனியை பறித்து விடலாம். ஏனெனில் ஒரு மாநிலத்தின் தேர்தல் கல்லூரியால் ஒதுக்கப்பட்ட ஆசனங்களைப் பெற பொதுமக்களின் வாக்கில் 50.1%மேற்பட்ட வாக்குகளை அக்கட்சி வேட்பாளர் பெற்றால் போதும்.

உதாரணமாக 2020 தேர்தலில் Democrats கட்சியை சேர்ந்த  Joe Biden அவர்கள் Michiganல் 50.6%[2,788,425] Public votes பெற்றுள்ள அதே வேளை Republican party சேர்ந்த Trump அவர்கள் 47.9%[2,639,037] Public votes பெற்று பின் தள்ளப்பட்ட நிலையில் அதிக Public votes பெற்ற Joe Bidenக்கு Michiganன் electoral votes 16ம் வழங்கப்படும்.

எனவே ஜனாதிபதி வேட்பாளர் தனது பிரச்சாரத்தை தனக்கு அதிக வாக்கு வங்கியுள்ள மாநிலத்திலோ அல்லது வாக்கு வங்கி மிகக் குறைந்த இடத்திலோ மேற்கொள்ள மாட்டார்.அது அவருக்கு பிரயோசனம் அற்றது.ஏனெனில் 99% வாக்கைப் பெறுவதும் 50.1%பெறுவதும் ஒன்று தான்.எனவே, அவ்வாறான பிரதேசங்களில் பிரச்சாரம் செய்வது எந்த மாற்றத்தையும் தராது.எனவே அவர்களின் பிரச்சாரம் எல்லாம் இரு பிரதான கட்சிக்கும் போட்டியுள்ள இடங்களிலேயே இடம் பெறும்.

பொதுவாக மேலே குறிப்பிட்ட மாநிலங்கள் முதல் 10ல் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் வேட்பாளர் அமெரிக்க ஜனாதிபதியாவர்.ஏனெனில் அதன் மொத்த Electoral Votes 270 ஆகும்.

எனவே,அமெரிக்க ஜனாதிபதியின் வெற்றி என்பது அதிக தேர்தல் கல்லூரி பிரதிநிதிகளைக் கொண்ட மானிலங்களில்  பொது மக்கள் வாக்கை 50%மேல் தனது பக்கம் திரும்பும் வேட்பாளருக்கே உரியதாக அமையும்.

நா.இராஜமனோகரன்
05 November 2020.

Thursday, September 26, 2019

தரணியில் தீப மானாய்!



வீணரை எதிர்த்து நின்று
    விடுதலை தீயில் வெந்து
ஆண்டுகள் ஒன்றை சென்ற
    ஆருயிர் தமிழே திலீபா!

தமிழ் தந்தான் வீதியிலே
    தமிழுக்காய் உயிர் தந்தாய்
உனை இழந்த இந்நாளில்
    உயிர் தமிழ்கள் கதறுதடா!

உரிமையை கோட்டையில் பேசி
    உணர்ச்சியாய் உரும்பிராயில் பேசி
நல்லூரில் நா நடுங்கபேசி
    நாமழ நீ பிரிந்தாயே!

அயல் நாட்டான் தலையீட்டால்
    அருந்தமிழே உனை இழந்தோம்
இதயம் வெடிக்கு  மிந்த
    இந்நாழும் நன் நாளோ!

ஓலக்கம் மீத மர்ந்து
    ஒப்பந்தம் நரிகள் செய்து
அடிமைக  ளாக்க எண்ண
     அகிம்சையில் போர் தொடுத்தாய்!

காந்தியின் தேசம் என்றார்
     காத்திடும் அகிம்சை என்றார்
உணவுநீர் ஒறுத்த உந்தன்
     உணர்வினை மதித்தா ரில்லை!

ஏற்றிய மெழுகாய் நீயும்
    எரிந்து நீ உருகிப்போனாய்
தமிழரின் உரிமை காக்க
    தரணியில் தீப மானாய்!

குறிப்பு :- திலீபனின் முதலாமாண்டு அன்று 'திலீபம்'இதழில் வந்த எனது கவிதை.இறுதி பகுதி மட்டும் நினைவில் இல்லாததால் மாற்றம் செய்துள்ளேன்.1991ல் உதயன் பத்திரிகையில் மீள்பிரசுரமானது.


Friday, August 30, 2019

இன்சுலின் என்றால் என்ன? What is insulin?


இன்சுலின் என்றால்... 


இன்சுலின் பானை


இரத்த சீனி மற்றும் ஆற்றல் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஒரு முக்கியமான ஹார்மோன் ஆகும்.

இன்சுலின் என்பது ஒரு ரசாயன தூதர், இது செல்கள் இரத்தத்திலிருந்து குளுக்கோஸ் என்ற சீனியை  உறிஞ்ச அனுமதிக்கிறது.

கணையம் என்பது வயிற்றுக்கு பின்னால் உள்ள ஒரு உறுப்பு ஆகும், இது உடலில் இன்சுலின் முக்கிய மூலமாகும்.

குளுக்கோஸின் அளவு அதிகமாக இருப்பதால், இரத்தத்தில் சீனியின் அளவை சமப்படுத்த  இன்சுலின் அதிக உற்பத்திக்கு செல்கிறது.

இன்சுலின் ஆற்றலுக்கான கொழுப்புகள் அல்லது புரதங்களை உடைக்க உதவுகிறது.

இன்சுலின் ஒரு நுட்பமான சமநிலையாக்கி, இரத்தத்தில் சீனி மற்றும் உடலில் பல செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. இன்சுலின் அளவு மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், அதிகப்படியான அல்லது குறைந்த இரத்த சீனி அறிகுறிகளை ஏற்படுத்தத் தொடங்கும். குறைந்த  அல்லது அதிக  இரத்தத்தில் சீனி நிலை தொடர்ந்தால், கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கும்.

Thursday, August 29, 2019

இன்சுலின் பிறந்த கதை

படத்தில் நீங்கள் பார்ப்பது  நீரிழிவு (Diabetes) எனும் கொடிய உயிர் குடிக்கும் நோயால் பாதிக்கப்பட்ட தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்

இரண்டாவது படத்தில் அவனது உயிர்காக்கும் அந்த மருந்து கிடைத்தவுடன் அவன் மீண்டும் பெற்ற வாழ்க்கை
ஆம்… அந்த உயிர்காக்கும் அமிர்தம் இன்சுலின் தான். நாள்தோறும் உலகின் பல கோடி மக்களின் உயிரைக்காப்பாற்றி வரும் இன்சுலின் பிறந்த கதை விந்தையானது.
Dr. பாண்டிங் எனும் அறுவை சிகிச்சை நிபுணர், அறிவியல் ஆராய்ச்சியில் பண்டித்தியம் கிடையாது. கார்போஹைட்ரேட் என்றால் பெரிதாக தெரியாது. அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியை படிக்கிறார்.
“கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு நோய் ஏற்பட்டது, அதுவே கணையத்தில் இருந்து வரும் குழாயை (pancreatic duct) மட்டும் அடைத்தால் நீரிழிவு ஏற்படவில்லை.
இதைப்படித்ததும் அவருக்கு ஒரு யோசனை வருகிறது, அந்த ஒரு யோசனைதான் பலரது வாழ்க்கையில் விளக்கேற்ற இருக்கிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது.
நாயின் கணையத்தில் இருந்து குழாயை அடைத்து விட்டால் கணையம் முழுவதுமாய் இறந்து விடுகிறது. இருப்பினும் டயாபடிஸில் இருந்து தடுக்கும் ஏதோ ஒன்றை அந்த நாயின் மீதி இருக்கும் கணையம் சுரக்கிறது என்று அறிந்தார்.
banting and best
மருத்துவர் பாண்டிங் (கண்ணாடி அணிந்திருப்பவர்) மற்றும் பெஸ்ட்.
இந்த அறிவியல் ஆய்வுக்காக டொரண்ட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மெக்லியாய்ட் துணையை நாடுகிறார். அவரும் தனது ஆய்வகத்தில் ஒரு பகுதியையும், துணைக்கு Dr. பெஸ்ட் எனும் மருத்துவரையும் தருகிறார்.
பல நாள் ஆய்வுக்கு பிறகு நாயின் மிச்ச கணையத்தின் Islet of langerhans எனும் பகுதியில் இருந்து அந்த திரவத்தை எடுத்தனர். அதை கணையம் முழுவதும் நீக்கப்பட்டு நீரிழிவு உண்டாக்கப்பட்ட நாய்க்கு ஊசியாக செலுத்தினர்.
அந்த நாய்க்கு உடனடியாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் குறைவதை கண்டனர். பின்பு அந்த திரவத்தை தூய்மை படுத்தி மனிதர்களுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டனர்.
அந்த உயிர் காக்கும் திரவம் தான் “இன்சுலின்” இந்த கண்டுபிடிப்புக்காக 1923-க்கான நோபல் பரிசு Dr. பாண்டிங் மற்றும் Dr. மெக்லியாய்ட் இருவருக்கும் வழங்கப்பட்டது.
இன்சுலின் கண்டறிந்து பாண்டிங் அதற்கான காப்புரிமையை மக்கள் அனைவரும் எளிதாக பெறுவதற்காக இலவசமாக அளித்தார். வரலாற்றில் நிலைத்தார்…
Understanding how a man's selflessness can change the world.