தொகையறா
காலிங்கராஜன் குளத்தருகே அமர்ந்திருந்து
அருளாட்சி புரிகின்ற கணபதியே !
போற்றி ! போற்றி !
நல்லுரில் பின்னவன் வீற்றிருந்தருள !
விநாயகர் வீதியில் முன்னவன் நீ அருள !
துன்பங்கள்
தீர்த்திடும் துதிக்கையை பற்றினோம்
தும்பி முகத்தானே துயர்
களைவாய்
போற்றி ! போற்றி !
பாடல்
சந்திர சேகர நாயகனே
- தினம்
அருள் தந்து காத்திடும் விநாயகனே
!
கற் றோரும் மற்றோரும்
துதிக்கின்ற
கருணா மூர்த்தி எம்
விநாயகனே !
சந்திரசேகர நாயகனே…!
தேரேறி ஊரெல்லாம்
வலம்
வந்தாய்
உனை துதித்தவர்
ஊரெங்கும்
வலம்வந்தார்
!
நிலையாக நீ
யமர்ந்தாய்
கோவிலிலே
நிர்க்கதியாய் நாம்
அலைந்தோம்
வீதியிலே !
சந்திரசேகர
நாயகனே…!
இசையோடு தமிழ் கலந்து உனைப்பாடினோம் !
உணர்வோடு தினம் உந்தன் தலம்நாடினோம் !
வீடிழந்த வேளையிலும் உனைத் தேடினோம் !
வேதனையில் கரம் பற்ற உனைநாடினோம் !
சந்திரசேகர
நாயகனே…!
வேலோடு தம்பி யுடன் வருவாயோ !
வேதனையை நீ களைந்துசுகம் தருவாயோ !
பாலோடும் ஊராக்கித் தரு வாயோ !
இரத்த மணமிழந்த மண்எமக்கு தருவாயோ !
சந்திரசேகர
நாயகனே…!
பாலோடு தேன்கலந்து
தினம்பாடுவேன்-உந்தன்
!
ஓங்கார முகம்காண
தினம்
நாடுவேன் !
ஔவையைதூக்கி நீ
கைலையில்
வைத்தாய்
!
எங்களைதூக்கி எம்
குடிசையில்
வைப்பாய் !
சந்திரசேகர நாயகனே…!
[1998ம் ஆண்டு எனது பிறந்த மண்ணில் எழுந்தரருளி
இருக்கும் “சந்திரசேரப் பிள்ளையா(ர்)”ரை
நோக்கி என்னால் எழுதப்பட்டது.]
சந்திரசேரப் பிள்ளையார்
வீடிழந்த வேளையிலும் உனைத் தேடினோம் !