Tuesday, April 30, 2013

குருதி தோய்ந்த மே தினத்தின் தோற்றம்!


18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் 
ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் 
தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு12 முதல் 18 மணி 
நேரக்கட்டாய வேலை செய்ய 
நிர்ப்பந்திக்கப்பட்டனர்.இதற்கெதிரான குரல்களும் 
பல்வேறு நாடுகளில் 
ஆங்காங்கே எழத் துவங்கியது
இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் 
தோன்றிய சாசன இயக்கம் 
(chartists).சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை 
முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது
அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.




பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த 
தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க 
வேண்டி இருந்தனர்
இதை எதிர்த்து அவர்கள் பெரும் 
வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் 
ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து 
பெரும் கிளர்ச்சியில்  ஈடுபட்டனர்
இவையனை த்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில்தொழிலாளர்இயக்கம்
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் 
ஈடுபட்டிருந்ததொழிலாளிகள் 
உலகிலேயே முதன் முதலாக 
மணி நேர வேலை கோரிக்கையை 
முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு
வெற் றியும்பெற்றனர்.
 இது தொழிலாளி வர்க்க 
போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்

முதல் மே நாளின் போது உருசியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டி 
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் 
துன்பங்களுக்கு ஆளானார்கள்இங்கும் 1895–1899க்கு 
இடைப்பட்ட காலத்தில்நூற்றுக்கணக்கான 
வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.
 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக 
எழுதிய சிறு பிரசுரத்தில்ரஷ்யத்
தொழிலாளிகளின்நிலை மை குறித்து விரிவாக அலசியதோடு
ரஷ்யத் தொழிலாளர்களின் 
பொருளாதார போராட்டம் – அரசியல் 
போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் 
என்பதையும் வலியுறுத்தினர்
தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கானபோராட்டங்களே 
ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவில்
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய 
தச்சுத்தொழிலாளர்கள் 10 மணி நேர 
வேலை கோரிக்கையை முன் வைத்து வேலை 
நிறுத்தம்செய்தனர்அதே போல், 1835இல் 
பிலடெல்பியாவிலும்பென்சில்வே னியாவிலும் 
இதே கோரிக்கையை 
முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டதுபென்சில்வேனியாவில் 
நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும்
இரயில்வே தொழிலாளர்களும் குறைவான 
வேலை நேரத்தை வலியுறுத்தி 
1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு 
மாநிலங்களில் உள்ள 
தொழிலாளர் இயக்கங்களை இணை த்து 
அமெரிக்க தொழிலாளர் கூட்ட மைப்பு” என்ற 
இயக்கம் உருவாக்கப்பட்டதுஇவ்வியக்கம் 8 மணி நேர வேலை
 கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து 
இயக்கங்களை நடத்தியது
அத்தோடு மே 1, 1886 அன்று
நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது
இவ்வியக்கமே மேதினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான 
நியூயார்க்
சிகாகோ
பிலடெல்பியா,
மில்விக்கி,
சின்சினாட்டி
பால்டிமோர் 
என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் 
பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது
இவ்வேலை நிறுத்தத்தில் 1200 க்கும் மேற்பட்ட 
நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத் தினால்
அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன
இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை.
 வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள்
 அமெரிக்காவை உலுக்கியது
மிச்சிகனில்மட்டும் 40,000 தொழிலாளர்களும்
சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் 
மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி


மே 3, 1886 அன்று 
மெக்கா ர்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” 
வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு 
கண்டனக் கூட்ட த்தை நடத்தினர்இங்கு இடம் பெற்ற 
கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவல் துறையினரின் 
துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர்இச்சம்பவத்தை 
கண்டிக்கும்வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் 
மே 4 அன்று மாபெரும்கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் 
தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட
 கண்டனக்கூட்டம் அமைதியான முறையில் நடை பெற்றது.
இந்நேரத்தில் காவல் துறையினர் அனைவரையும் கலைந்து
 செல்லுமாறு கூறினர்.இவ் வேளையில் 
திடீரென்று கூட்ட த்தில் வெடிகுண்டு 
வீசப் பட்டதில் அந்தஇடத்திலேயே 
ஒரு காவல் துறையினர் பலியானார்
பின்னர் போலீசார்கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு 
நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர்
அத்துடன்தொழிலாளர் தலைவர்களை 
கைது செய்து வழக்குத் தொடுத்தனர்.
 இந்த வழக்குஜூன் 21, 1886 அன்று துவங்கியது
பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப் பட்டது.



அமெரிக்காவின் கறுப்பு தினம்


நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் 
ஆகஸ்ட் ஸ்பைஸ்
ஆல் பேர்ட்பார்சன்ஸ்
அடொல்ஃப் ஃபிஷர்
ஜோர்ஜ் ஏங்கல் 
ஆகியோர்  தூக்கிலிடப்பட்டனர்
நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற 
இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே 
அணி திரண் டது
நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது 
இறுதிஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு,
அமெரிக்கா முழு வதும் கறுப்பு தினமாகஅனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர 
வேலைக்கான போராட்டமும்,
சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் 
இன்றைக்கு
 "மே தின(ம்)"மாக – உழைப்பவர்தினமாக நம்முன் நிற்கிறது.


அனைத்து நாடுகளிலும் மே தினம்



1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் 
தொழிலாளர்களின் 
‘’சர்வ தேசதொழிலாளர் பாராளு மன் றம்’’ 
கூடியது

18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள்
இக்கூட்டத்தில் பங்கேற்றனர்
பிரெட் ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் 
கலந்துகொண்ட இக்கூட்டத்தில் 
கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 
மணி நேரபோராட்டத்தை 
முன்னெடுத்துச் செல்வது என்றும்
சிக்காகோ சதியை 
இம்மாநாடுகடுமையாக கண்டித்ததோடு
1890 மே 1 அன்று அனைத்துலக அளவில்
தொழிலாளர்கள் இயக்கங்களை 
நடத்திட வேண்டும் என்றும் 
அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை
சர்வதேச தொழிலாளர் தினமாக
மேதினமாக 
அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

Sunday, April 28, 2013

வாழ்க்கைக்கு தேவையான வாழைப்பொத்தி...!

·     வாழைப்பூ- வாழைமரத்தின் கொத்துப்பூ அல்லது வாழைப்பொத்தி

·     தா.இயல்-பெ--Musa Sapientum-Flower




பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இலங்கையில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். தோட்டங்களிலும் பயிர் செய்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. அகத்தியர் பெருமான் குணபாடத்தில் எட்டு வகை வாழையைப் பற்றியும் அதன் குணங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்களைப் பற்றி சித்தர்கள் அகத்தியர் பெருமான்

"வாழைப்பூ மூலரத்தம் மாபிரமி வெட்டை பித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - ஆழியனல்
என்னஏரி கைகால் எரிவுந் தொலைத்துடலில்
மன்னவளர்க் குத்தாறுவை"

  - அகத்தியர் குணபாடம்

பொருள்குருதிமுனை, வெள்ளை, வெறி உடல் கொதிப்பு, சீதக்கழிச்சல் எருவாய்க் கருப்பு, இருமல், கை, கால் எரிச்சல் இவைகளைப் போக்கும் ஆண்மையைப் பெருக்கும்வாழைப்பூ துவர்ப்புத் தன்மை கொண்டது.

வாழைப்பூ-மருத்துவக் குணங்கள் :-
  




சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.


இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். 
கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க


வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.