Monday, February 22, 2016

கச்சதீவின் அமைவிடமும் வரலாறும்...!

யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள தீவு கச்சதீவாகும்இதன் தனியமைவு 9° 23′ 0″ N79° 31′ 0″ E
இது இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில்டார்குயின்எனும் பச்சை ஆமைகள் அதிகம். ‘கச்சம்’ என்றால்ஆமை’ என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று.

1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோனியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.

கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு ,நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.  தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது

தமிழ்நாடு ஆங்கிலேயரின்  குடியேற்ற ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரண முற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரி ராணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார்

இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பீரிஸ் (1936-40 ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்), “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சதீவு இலங்கையைச் சேர்ந்ததன்று அது இராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56 இல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது .

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் .ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை இராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், இராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் நில அளவை எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு இராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப்பிரதமரான திருமதி. இந்திராகாந்தி, இலங்கையின் பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து அப்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, மற்றும் தி.மு.கவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன..நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக் கடனாக இந்தியா கச்சதீவை தாரை வார்த்தது .

கச்சதீவை தாரை வார்த்த இந்தியா இலங்கைக்கு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சதீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லைஎன்பதே ஆகும்.


கச்சத்தீவில் மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புகழ்பெற்ற புனித அந்தோனியார் தேவாலயம்(St. Anthony's Church) ஒன்று உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். இலங்கையில் இனக் கலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது


ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.மீன் பிடிக்க அனுமதி இல்லை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில்1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது.




கச்சதீவினால் ஏற்படக்கூடிய நன்மைகள் சிந்தித்துப் பார்த்தால்,
1] கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், இராமேஸ்வரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம்.
2]சித்தமருத்துவத்திற்குத் தேவையானஉமிரிபோன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன.
3] கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.
4] கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் 1983 ஆம் ஆண்ட கூறியுள்ளனர்.
5] கச்சத்தீவுகுமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர்.
6] நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.
7] அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது.
8] ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.
9] கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம்.
10] இராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம்.
11] பாக், நீரிணை மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

இன்று இந்தியா கச்சதீவு தொடர்பாக அக்கறை காட்ட இதுவே காரணம், ஆனால் இலங்கை இதனை ஒருபோதும் கையளிக்க வாய்பில்லை.அப்படி இந்தியா கோரினாலும், புனையப்பட்ட வரலாற்று கதை ஒன்று இலங்கையிடம் தயாராகவே இருக்கும்.