Sunday, June 23, 2013

முதியவரே !,என் வயது என்ன?

ஒரு பெண் தனக்கு 47 வயது என்றாலும் தான் இளமையாக இருப்பதாக நினைப்பு! இந்த நினைப்பை அவ்வப்போது அடுத்தவரிடம் தனது வயது என்ன என்று கேட்டு அவர்கள் குறைவாக சொன்னால் புளகாங்கிதம் அடைந்து உச்சி குளிர்வார். இது இவரது பலவீனம் அல்லது ஒரு பொழுதுபோக்கு அல்லது தலைக்கேறிய பெருமிதம் என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.

இவ்வாறான இந்தப் பெண் மார்க்கெட் செல்கிறார். அங்கு காய்கறிக் கடைக்காரரிடம் தன் வயது என்ன என்கிறார். அவர் உடனே என்ன ஒரு 30 இருக்குமா? என்கிறார் உடனே புன்முறுவலுடன் 47 என்று கூறுகிறார். வியாபாரி பார்த்தா தெரியவேயில்லை என்று கூற பெருமிதம் தலைக்கேறுகிறது.

அடுத்ததாக ஷாப்பிங் செல்லும்போது பலசரக்கு கடை ஒன்றில் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் பர்சேஸ் எல்லாம் முடித்த பிறகு என் வயது எவ்வளவு என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்கிறார். அவர் என்ன 27லேர்ந்து 30 இருக்கும் என்கிறார். சிரித்தபடியே 47 என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.

அடுத்ததாக மெக்டொனால்ட் உணவகத்திற்கு வந்து உணவுப்பொட்டலங்களை பார்சல் வாங்கிக் கொண்டு தனக்கு சர்வ் செய்த அந்த ஊழியரிடம் என் உண்மையான வயதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்கிறார். அவரும் 29 அல்லது 30 என்கிறார். இல்லை 47 என்கிறார்.

இப்படியே போய் கடைசியில் பஸ் ஸ்டாப்பிற்கு வருகிறார். அருகில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். சரி இவரிடமும் கடைசியாக கேட்டு விடுவோம் என்று என் உண்மையான வயதை உங்களால் கூற முடியுமா என்கிறார்.

அவர் உடனே எனக்கு கண் பார்வை அவ்வளவு கூர்மையாக இல்லை நான் உங்கள் மார்பை தொட்டுப் பார்த்தால் சரியாகச் சொல்லிவிடுவேன் என்கிறார். சற்றே பின் வாங்கிய இந்தப் பெண்மணி வயது தெரியாமல் இருக்கிறோம் என்ற பெருமிதத்தின் உச்சத்தில் சரி மறைவாக வாருங்கள் என்று கூறி மார்பை தொட்டுப்பார்த்துக் கூறுங்கள் என்கிறார். மேலும் 70 வயது முதியவர்தானே என்று உள்ளுக்குள் சமாதானம் வேறு அடைகிறார்.

அந்த முதியவர் மார்பை இருபுறமும் நன்றாக பதம் பார்த்துவிட்டு கடைசியில் உங்கள் வயது சரியாக 47 என்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், ஆர்வ மிகுதியால் இது மிகப்பெரிய ஒரு விஷயம்தான் எப்படி அவ்வளவு சரியாக என் வயதைக் கண்டுபிடித்தீர்கள் என்கிறார்.
அதற்கு அந்த முதியவர்: மெக்டொனால்ட் உணவகத்தில் அந்த ஊழியரிடம் நீங்கள் உங்கள் வயதைக்கூறும்போது நான் பின்னால் நின்று கொண்டிருந்தேன் என்றாரே பார்க்கலாம்!

No comments:

Post a Comment