பூநகரி பிரதேசத்தில் பாரம்பரியமுறையில்
உணவு பரிமாறப்படும் பனை ஒலையால்
இழைக்கப்பட்ட கலசமே "தட்டுவம்"ஆகும்.
இது பார்பதற்கு "பிளா"போன்று காணப்பட்டாலும்,
கை பிடிப்பதற்கான வால் போன்ற பகுதி காணப்படவில்லை.
இத் தன்மையே தட்டுவத்தையும்,பிளாவையும்
வேறு படுத்தும் அம்சமாகும்.
பூநகரி பிரதேசம் எங்கு உள்ளது என நோக்கின்...
இப்பிரிவு 439 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது
பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும்.
இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே
யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரம்,
மன்னார்க் குடாக்கடல் ஆகியவற்றை அண்டி அமைந்துள்ளது.
இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக
19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- நல்லூர்
- ஆலங்கேணி
- கொல்லக்குறிச்சி
- செட்டியக்குறிச்சி
- ஞானிமடம்
- மட்டுவில்நாடு
- பள்ளிக்குடா
- பரமன்கிரி
- கௌதாரிமுனை
- ஜயபுரம்
- கரியாலைநாகபடுவான்
- பல்லவராயன்கட்டு
- முழங்காவில்
- நாச்சிக்குடா
- கிராஞ்சி
- பொன்னாவெளி
- இரணைதீவுஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு எல்லையில் யாழ்ப்பாண நீரேரியும், மேற்கில் மன்னார்க் குடாக்கடலும், கிழக்கில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் மன்னார் மாவட்டமும்உள்ளன.
கௌதாரிமுனை |
No comments:
Post a Comment