Friday, March 11, 2016

என்றும்! நினைவில் நீங்கா மனிதனாய்


சுறுசுறுப்பான நடை
மனத்தில் தோன்றும் எண்ணங்கள்
உன் நாவால் திரிக்கப்படுதில்லை!

உள்ளே... வெளியே... என்ற
வார்த்தை ஜாலங்கள்
உன்னிடம் இல்லை!

இனப்பற்றுடன்
எழுந்து நடந்தவர்களில்
நீ ஒருவன்!

துணிப்பையில்
தடி,பொல்லு,மட்டை,கயிறு-என்று,
சைக்கிளில் நடமாடிய 
அன்றைய அம்புலனஸ் நீ!

'வாத்தி' என்று
எம்மால்
வாயார அழைக்கப்பட்டவன்!

என்றும்!
நினைவில் நீங்கா மனிதனாய்
'வாத்தி'!

No comments:

Post a Comment