சுறுசுறுப்பான நடை
மனத்தில் தோன்றும் எண்ணங்கள்
உன் நாவால் திரிக்கப்படுதில்லை!
உள்ளே... வெளியே... என்ற
வார்த்தை ஜாலங்கள்
உன்னிடம் இல்லை!
இனப்பற்றுடன்
எழுந்து நடந்தவர்களில்
நீ ஒருவன்!
துணிப்பையில்
தடி,பொல்லு,மட்டை,கயிறு-என்று,
சைக்கிளில் நடமாடிய
அன்றைய அம்புலனஸ் நீ!
'வாத்தி' என்று
எம்மால்
வாயார அழைக்கப்பட்டவன்!
என்றும்!
நினைவில் நீங்கா மனிதனாய்
'வாத்தி'!
No comments:
Post a Comment