Saturday, January 10, 2026

(Lyrics)

The United States bombed Venezuela.
Washington says it captured President
Nicolás Maduro and his wife, Cilia Flores.
No UN vote.
No mandate.
Just force.
.....

"Who’s the terrorist? Say it clear."


War planes over Caracas at night.
Explosions tear through homes and lights.
Hospitals shake, streets go black.
Families run with nothing packed.

Washington says, “Trust our claim.”
They said that in Iraq — same game.
Weapons of lies, no proof to show.
Graves stayed full, careers still glow.
They call it law when they break the law.
They call it peace when civilians fall.

Who’s the terrorist? Say it clear.
Who’s the terrorist? Say it clear.

When the US drops the bombs.
And drags leaders out at gunpoint,
When oil is sacred, lives are cheap.
Who’s the terrorist now?

Oh, oh, oh, oh, oh.
Oh,Oh,Oh,Oh,Oh,Oh

Iran choked since ’53 — oil first.
Coups agreed, Chile crushed.
Guatemala bled, Panama bombed.
Grenada dead.
Hawaii stolen crown torn down.
Philippines drowned in empire sound.
Libya burned into open graves.
Then blame the people — they failed to save 

No court.
No judge.
No trial.
Missiles first.
Explanations later.

Who’s the terrorist? Say the name.
Who’s the terrorist? Who brings the flame?

When the US decides it's the law,
And sovereignty means nothing.

When presidents are kidnapped,
And civilians pay the price,
Who’s the terrorist now?

Oh, oh, oh, oh, oh.
Oh,Oh,Oh,Oh,Oh,Oh

International law is for the weak.
Power writes its own excuses.
Diplomacy was skipped,
Because bombs are faster than words.
You stayed silent when it wasn’t you.

Now the playbook’s coming through.
Oh, oh, oh, oh, oh.
Who’s the terrorist? Say it slow.
Who’s the terrorist? Now you know.

Oil over lives.
Power over truth.
Uniforms wash the blood away
And call it “security.”
Who’s the terrorist now?
............

Small countries, listen.
Silence did not protect you..


HEART ECHOES

Sunday, December 21, 2025

10G தொழிநுட்பம்....ஒரு இலத்திரனியல் பாய்ச்சல்...!

(10G Technology… A Digital Leap!)





“10G is the digital bridge between dreams and reality.”

நவீன உலகில் தொழில்நுட்ப வேகப் புரட்சி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தகவல் பரிமாற்றத்தில் “வேகம்” என்பது இனி ஒரு ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியத் தேவையாகி விட்டது. இந்தச் சூழலில், சீனா சமீபத்தில் எடுத்த பெரிய முன்னெடுப்பு, உலகின் கவனத்தை ஒருசேர குவித்துள்ளது. ஹுவாய் (Huawei) மற்றும் சைனா யூனிகாம் (China Unicom) இணைந்து, உலகின் முதலாவது வணிக நிலை சார்ந்த 10G அகன்ற அலை வரிசை வலையமைப்பை (broadband network ) அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தகவல் தொடர்பியல் துறையில் புதிய மைல்கல்லாக உருவெடுத்துள்ள 10G தொழில்நுட்பம்,உலகின் நவீனதேவைகளுக்கான அதிவேக, நம்பகத்தன்மை வாய்ந்த, செயற்கை நுண்ணறிவு இணைந்த தகவல் பரிமாற்ற அமைப்பு ஆகும். இது ஒரு சாதாரண இணைய வேக மேம்பாடு அல்ல.மாறாக, வரவிருக்கும் இலத்திரனியல் உலகின் அடித்தளமாக உருவெடுக்கும் முழுமையான ஒளிவட அடிப்படை மேடை (fiber-based platform) ஆகும். பெரும்பாலான நாடுகள் இன்று 1 Gbps அல்லது 0.5 Gigabit இணையத்தை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கின்றன. சில வளர்ச்சி அடைந்த நாடுகள் 2-5 Gbps வரை வழங்கினாலும், 10 Gbps (அதாவது 10G) என்பது ஒரு பெரிய தர உயர்வு என்றே கூறலாம்.

அதாவது,10G அகன்ற வரிசை வலையமைப்பு உலகின் இணைய உள்கட்டமைப்பில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியுள்ளது என்றால் மிகையில்லை.இது சாதாரண “வேக உயர்வு” மட்டுமல்ல தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை செயல் முறைகளையே முற்றிலுமாக மாற்றும் முயற்சியாகும்.

இங்கு ஒளிவடம்(Optical Fiber Cable)தான் 10G-க்கு அடிப்படையாக அமைகிறது என்பது கவனிக்கத்தக்கது. இன்றைய உயர்தர இணையம் அனைத்தும் ஒளியிழை(optical fiber) என்ற கண்ணாடிக் கம்பி வழியாக செல்கிறது. இதில் தகவல்கள் ஒளி (light pulses) வடிவில் செல்லும்.

ஒளியின் வேகம் மின்சாரத்தை விட 10 மடங்கு வேகமானது அதுமட்டுமன்றி சமிக்ஞை இழப்பு(signal loss) இதில் மிக குறைவு.அதிகளவு அலை வரிசையானது (bandwidth) அதிக தூரம் வரை சிதைவின்றி செல்லும். அத்துடன்
10G இணையத்தின் முழுக்கட்டுமான ஆற்றலும் இந்த கண்ணாடிக் கம்பிகள் வழியாகத்தான் நடக்கிறது.

பலர் இதை 5G-க்குப் பிறகு வரும் 10th Generation என நினைப்பார்கள். ஆனால் அது தவறு.10G = 10 Gigabit per second.இது முக்கியமாக வட வலையமைப்பு அல்லது ஒளி வடவலையமைப்பு (Cable internet / Fiber networks) மூலமாக வழங்கப்படும் மிகை வேக(Super fast)இணையத் தொழில்நுட்பம் ஆகும்.5G என்பது காற்று வழி (Air Medium) தொடர்பாடல் தொழில்நுட்பமாகும்.
அதாவது,10G என்பது ஒளிவடத்தின் (Optical Fiber)ஊடாக நடைபெறும் தகவல் பரிமாற்றமுறை.இதனால், இரண்டும் ஒன்றல்ல.இதனை கைப்பேசி வலையமைப்பில் பயன்படுத்த முடியாது.

10G என்பது,கைபேசி தலைமுறை(Mobile Generation) அல்ல.5G என்பது ஐந்தாம் தலைமுறை கைபேசி தொழில்நுட்பமாகும்(Fifth Generation mobile technology).இனி வரப்போவது 6G-ஆறாம் தலைமுறை கைபேசி தொழில் நுட்பமாகும் (Sixth Generation mobile technology). கைப்பேசியானது 10 Gbps வேகம் பெற வேண்டுமெனில் ஆறாம்  தாலைமுறை வருகையுடன் தான் அது வேகம் எடுக்கும் என்பதுடன், அதன் வேகம்50 Gbps முதல் 1 Tbps வரை இருக்கும் அதாவது, எதிர்கால கைபேசி வலையமைப்புக்கள் 10G வேகத்தை தாண்டி செல்லும் என்பதே யதார்த்தம்.

நாம் இன்று கைப்பேசிகளில் 5G கைபேசி (Mobile)ல் கம்பியில்லா தொழில்நுட்பத்தை (Wireless Technology)ஐ பயன்படுத்துகின்றோம். இந்த 5G என்பது கைபேசிகள் மற்றும் கம்பியில்லா சாதனங்களுக்கு(wireless devices) க்கு பயன்படுத்தப்படும் கம்பியில்லா கைப்பேசி வலையமைப்பு (wireless cellular network) ஆகும்.இது அடிப்படையாக கோபுரங்கள்(Base towers) மற்றும் காற்றில் வானொலி அலைகள் (radio waves in the air)மூலம் செயற்படுகின்றது. அத்துடன் இது சிம் அடிப்படையிலான இணைப்பு (SIM-based connectivity) மற்றும்  அகன்ற அலை வரிசை(broadband) இணைப்பூடாக இயங்குகிறது. இங்கு காற்று ஊடகமாக(air medium or pathway) பயன்படுத்தப்படுகிறது. எந்த பௌதிக வடமும் (physical cable, Ex:fiber, copper) இதற்கு தேவையில்லை. ஆனால்,10G அகன்ற அலைவரிசை என்பது 5G கைபேசி இணையம் போன்ற “கம்பியில்லா” தொழில்நுட்பம் அல்ல.இது ஒளிஇழை (fiber-optic) வடம் வழியாக வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள் போன்ற இடங்களுக்கு வழங்கப்படும் "நிலையான அகன்ற அலைவரிசை" (“fixed broadband”)ஆகும்.

10G ஒளி இழை வழியாக இயங்குவதால் வலையமைப்புகளின் குறுக்கீடு இல்லாதது. அதுமட்டுமன்றி மழை, காற்று,மின்னல் ஆகியவற்றின் பாதிப்புகள் இதில் மிகக் குறைவு.அத்துடன் சீரான செயல்திறன் கொண்டது.சமிக்ஞை வீழ்ச்சி கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்றே கூறலாம்.இது வங்கி, அவசர சேவைகள், தரவு மையங்கள் போன்றவற்றுக்கு மிகவும் ஏற்றது.

அதுமட்டுமன்றி,10G தொழில்நுட்பத்தில் பதிவிறக்க வேகம் 10 Gbps. அதே போல் பதிவேற்ற வேகமும் 10 Gbps வரை சேர்க்க முடியும். இது WiFi, 4G, 5G ஆகியவற்றில் கிடைக்காத ஒரு முக்கிய நன்மை ஆகும்.

உதாரணமாக:
YouTube creators, Cloud server upload, CCTV cloud backup ஆகியவற்றில் பதிவேற்றம் (upload) வேகம் மிக முக்கியம் என்பது கவனிக்கத்தக்கது.

இது,99.99% நம்பகத்தன்மை கொண்டது என்பதுடன். ஒளிவடம்  வழியாக இயங்குவதால் 10G வலையமைப்பு ஏனையவற்றின் குறுக்கீடுகளுக்கு உட்படுவதில்லை.ஒளியியல் இழைகள்(Optical fiber), தந்திகளற்ற கோபுரங்கள்(wireless towers)என்பவற்றை விட 40–60% குறைந்த எரி சக்தியில் தரவுகளை பரிமாறும் திறன் கொண்டது. இதனால்,பசுமை வலையமைப்பு, சுற்றுச்சூழல் நட்பு ICT உள்கட்டமைப்பு,நீண்ட கால செலவு குறைப்பு எனப்படும் பல நன்மைகள் இதனால் கிடைக்கின்றன.

எனவே,10G தொழில்நுட்பம் என்பது வெறும் இணைய மேம்பாடு மட்டும் அல்ல,இது நமது வீடு, வேலை, மருத்துவம், கல்வி, தொழில்,நகர நிர்வாகம் ஆகிய அனைத்தையும் மாற்றும் மிகப் பெரிய இலத்திரனியல் புரட்சி ஆகும்.

அதி வேகத்தைத் தாண்டி, அதன் அதீத நம்பகத்தன்மை(High Reliability),
AI பாதுகாப்பு, மிகக் குறைந்த தாமதம் (Ultra Low latency), எதிர்கால தயார்நிலை (future-readiness) எனப் பல அம்சங்கள் உலகின் அடுத்த தலைமுறையை முன்னோக்கி  உந்தித்தள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

“10G isn’t just speed; it’s the future flowing through fiber.”

நா.இராஜமனோகரன்
07 December 2025

Saturday, December 20, 2025


பொதுமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தம்!

(International Covenant on Civil

and Political Rights)

இலங்கையில் ICCPR என்பது மிக முக்கியமான மனித உரிமை சட்ட அடிப்படையைக் குறிக்கும். இதன் முழுப் பெயர் International Covenant on Civil and Political Rights (பொதுமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச ஒப்பந்தம்)

ICCPR  என்பது...!

ICCPR என்பது 1966 ஆம் ஆண்டு ஐ.நா. (United Nations) உருவாக்கிய முக்கியமான மனித உரிமை சர்வதேச ஒப்பந்தம்.

இதன் நோக்கம் எந்த நாட்டிலிருந்தும், எந்த சமூகத்திலிருந்தும், எந்த மத,இனம்,மொழி, வர்க்கத்திலிருந்து வந்தாலும், ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை மனித உரிமை மற்றும் அரசியல் உரிமை கிடைக்க வேண்டும் என்பதே.

இலங்கை 1980களில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.

ICCPR வழங்கும் முக்கியமான மனித உரிமைகள்...

1. உயிர் வாழும் உரிமை (Right to Life)...
எவரும் சட்டவிரோதமாக உயிரை இழக்கச் செய்யப்படக்கூடாது.

2. சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உரிமை...
திடீர் கைது, சட்டவிரோத கைது, ரகசிய சிறை போன்றவை தடை.

3. சித்திரவதை (Torture) தடை...
எந்தக் காரணத்திற்கும் மனிதர்களை சித்திரவதைப்படுத்தக்கூடாது.

4. சுதந்திரமான விசாரணை மற்றும் நீதியான நீதிமன்ற நடைமுறை...
நீதிமன்றத்தில் நியாயமான முறையில் விசாரணை பெறும் உரிமை.

5. மத, சொற்பொழிவு, கருத்து வெளிப்படுத்தும் உரிமை...
அமைதியான முறையில் கருத்து சொல்வது, ஊடக சுதந்திரம், மத சடங்கு பின்பற்றுதல் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன.

6. அமைதியான கூட்டம் மற்றும் தொழிற் சங்க உரிமை...
போராட்டம் நடத்துதல், அமைதியான கூட்டம், தொழிற்சங்கங்கள் போன்றவை சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுகின்றன.

7. இன, மத, மொழி அடிப்படையிலான பாகுபாடு தடை...
எவரும் பாகுபாடின்றி மனித உரிமை பெற வேண்டும்.

இலங்கையில் ICCPR சட்டமாக உருவானது...

இலங்கையில் இது ICCPR Act No. 56 of 2007 என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.
இதன் முக்கிய நோக்கம்:
1.பாகுபாடுகளைத் தடுக்க
2.மத வெறுப்பு தூண்டும் செயல்களை தடுக்க
3.மனிதர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திர உரிமையை உறுதி செய்ய

ICCPR Act (இலங்கை) முக்கிய அம்சங்கள்

மத, இன, மொழி வெறுப்பு தூண்டும் உரை அல்லது செயல்களுக்கு தடை.
எவரேனும் இனவெறி தூண்டும் வகையில்
மதவெறி பரப்பும் வகையில்
வன்முறையை தூண்டும் வகையில்
பேசினால் அல்லது செயல்பட்டால்
கடுமையான தண்டனை வழங்கப்படும்.

மனிதரை ஆபத்துக்கு உள்ளாக்கும் வெறுப்பு பேச்சு குற்றம் ஆகும்.

"கூடிய வெறுப்பு உருவாக்கும்" உரை அல்லது பதிவுகள் குற்றமாக கருதப்படும்.

ICCPRன் முக்கியத்துவம்...

1.ஒவ்வொருவரும் சமமான மனித உரிமை பெறுவதற்கு
2.போலீஸ், அரசு, தனிநபர் என எவராலும் உரிமை மீறப்படாமல் இருக்க
3.மத, இன முரண்பாடுகளைத் தடுக்க
4.நீதிமன்றத்தில் பாதுகாப்பு கிடைக்க
5.நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த

சுருக்கமாக கூறின்,ICCPR என்பது மனிதனுடைய சுதந்திரம், பாதுகாப்பு, சமத்துவம், கருத்து தெரிவிக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச சட்டம்.
இலங்கையில் இதை மீறினால் தண்டனை உண்டு என்பதாகும்.

இச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர Attorney General (AG) இன் அனுமதி அவசியம்.

இதற்கான தண்டனை அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை,அபராதம் (நீதிமன்றத்தின் விருப்பப்படி)

நா.இராஜமனோகரன்
27 November 2025

"Lonely Planet" சுற்றுலா பயண வழிகாட்டி..!


"Travel doesn’t become adventure until you leave yourself behind." 
-Marty Rubin-

“சுற்றுலா” என்பது "ஒரு பயணி சாதாரணமாக தான் வாழும் சூழலை விட்டு வெளியேறி, பயண நோக்கத்துடன், கணிசமான காலத்திற்கு பயணம் செய்யும் செயல்பாடு" என்று குறிப்பிடலாம். ஆனால் அதனை மட்டும் வைத்து சுற்றுலாவை மதிப்பிடுவது போதுமானது அல்ல; அதன் மூலம் ஏற்படும் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் விளைவுகள், பெறும் பயன்கள், அதன் வழியில் உண்டாகும் சவால்கள் அனைத்தும் சேர்ந்து பார்க்கப்பட வேண்டும். சமூகத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு “பொறுப்புணர்வு, நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஆதரவு” என்ற மூன்று கோணங்களும் முக்கியமானவை.

இவற்றின் அடிப்படையிலேயே Lonely Planet தனது வழிகாட்டி செயற்பாட்டு கைநூலை வடிவமைக்கிறது. அந்த வகையில்,உலகம் முழுவதும் சுற்றுலா பயணிகளை கவரும் மற்றும் வழிகாட்டும் மிகப் பெரிய பெயராக "Lonely Planet" இன்று விளங்குகின்றது.

"சுற்றுலா" என்பது வெறும் இடமாற்றம் அல்ல, அனுபவம்  அந்த அனுபவத்தை நம்பகமாகப் பகிர்ந்தளிக்கும் நிறுவனம் தான் Lonely Planet. 

இது  உலகப் பயண வரைபடத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் புரட்சிகரமான முயற்சியாகும்.

Lonely Planet நிறுவனம் 1973 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தம்பதிகள் Tony Wheeler மற்றும் Maureen Wheeler ஆகியோரால் நிறுவப்பட்டது.
இவர்கள் 1972 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இந்தியா, நேபாளம் மற்றும் தென்கிழக்காசியாவிற்கான ஓர் நீண்ட சாகசப் பயணத்தை மேற்கொண்டனர். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் எழுதிய புத்தகம் “Across Asia on the Cheap” இது அவர்களின் முதல் சுற்றுலா வழிகாட்டி புத்தகமாக வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தின் வெற்றி "Lonely Planet Publications" என்ற நிறுவனத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.

“Lonely Planet” என்ற பெயர் உண்மையில் ஒரு தவறான புரிதலின் விளைவு (misheard lyric) ஆகும்.Tony Wheeler, Joe Cocker பாடிய “Space Captain” என்ற பாடலில் உள்ள “Lovely Planet” என்ற சொல்லை தவறாக “Lonely Planet” எனக் கேட்டார். அதுவே உலகப்புகழ்பெற்ற நிறுவனத்தின் பெயராக மாறியது.

1970களில் சிலர் மட்டுமே உலகை சுற்றியபோது, Lonely Planet சுற்றுலாவை அனைவருக்கும் அணுகத்தக்கதாக மாற்றியது.“Budget Travel” (சிக்கன பயணம்) என்ற கருதியலை உலகிற்கு அறிமுகப்படுத்திய நிறுவனமாக இது திகழ்கிறது.

1980களில் வெளியிடப்பட்ட “South-East Asia on a Shoestring” என்ற புத்தகம் சிக்கனப் பயணிகள் (backpackers) மத்தியில் இது "சிக்கனப் பயணிகளின் பைபிள்" (Backpacker’s Bible) என இந்த பதிப்பு அறியப்பட்டது.

1990–2000களில் நிறுவனம் உலகின் பல பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் மூலம் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வழிகாட்டி புத்தகங்களை வெளியிட்டது.இத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மின்நூல்கள் மற்றும் இணைய தளங்களும் தொடங்கப்பட்டது.

Lonely planetன் முதல் வெளியீடு 1973ல் "Across Asia on the Cheap" என்ற புத்தகம் ஆகும். இது,ஆசியா முழுவதும் குறைந்த செலவில் பயணிக்க உதவும், Lonely Planet நிறுவனம் வெளியிட்ட முதல் பயணக் கையேடு என்பது குறிப்பிடத்தக்கது.

இது Lonely Planet நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற புத்தகம் 1981ல் எழுதப்பட்ட "South-East Asia on a Shoestring" என்ற நூல். இது உலகப்புகழ் பெற்ற வழிகாட்டி நூல் என்பது குறிப்பிடத்தக்கது.Tony மற்றும் Maureen Wheeler எழுதிய இப் புத்தகம் சிக்கன செலவு பயணிகளுக்கான வழிகாட்டி (budget travel guide) என்ற நோக்கில் வெளியிடப்பட்டது.இந்த வெளியீட்டின் மூலம் Lonely Planet நிறுவனத்தின் சர்வதேச புகழ் மேலோங்க ஆரம்பித்தது.
“Shoestring” என்றால் குறைந்த செலவு அல்லது சிக்கன செலவு என பொருள்.இதன் மூலம், South-East Asia-விற்கான கிராமங்கள், உணவகம், வாடகை வீடுகள், போக்குவரத்து வழித்தடங்கள் போன்ற தகவல்கள் பயணிகளுக்கு கிடைத்தன.

2007ல் BBC உலகலாவிய நிறுவனம் Lonely Planet ஐ வாங்கியது.2013ல்BBC நிறுவனம் அதை அமெரிக்காவின் NC2 Media க்கு விற்றது. பின்,2020களில் Red Ventures குழுமத்தின் கீழ் “Digital Travel Media” என்ற வடிவில் இது விரிவடைந்தது.

Lonely Planet நிறுவனத்தின் முக்கிய நோக்கம், “உண்மையான அனுபவத்துடன், பொறுப்புணர்ச்சியுடன் உலகை ஆராய பயணிகளை ஊக்குவிப்பது." அதாவது, சுற்றுலா என்பது வெறும் கண்களால் பார்க்கும் விடயம் அல்ல, அது ஒரு கலாசார பிணைப்பு, சுற்றுச்சூழல் பொறுப்பு, மனித நேய அனுபவம் என்பதைக் காட்டுகிறது.



இந்த நிறுவனத்தின் சிறப்பு என்பது,

1. நேரடி ஆய்வு – அவர்களின் எழுத்தாளர்கள் தாமே அந்த இடங்களுக்கு பயணம் செய்து, அங்கு வாழ்ந்து தகவல்களை சேகரிப்பது.

2. நம்பகத்தன்மை – எந்த விளம்பர நிதியுடனும் சார்ந்ததல்லாத சுயாதீன மதிப்பீடு.

3. பொறுப்பான பயணம் – சுற்றுச்சூழல் பாதுகாப்பும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மதிப்பதும்.

4. சமூகப் பங்களிப்பு – குறைந்த வசதியுள்ள நாடுகளில் நிலைத்த பயணத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள்.

தற்போதைய நிலை (2025) என பார்க்கும் போது,இன்றைய நிலையில் Lonely Planet ஆனது 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வழிகாட்டிகளை வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் “Best in Travel” என்ற பட்டியலை வெளியிடுகிறது, அதில் சிறந்த நகரங்கள், நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இடம்பெறுகின்றன.

2026 ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம் (Jaffna, Sri Lanka) இடம்பெற்றுள்ளது என்பது இலங்கைக்கு பெருமை தரும் விடயம்.

சுதந்திரம் பெற்ற பிறகு யாழ்ப்பாணம் புதிய சுற்றுலா இடமாக வளர்ந்து வருகிறது.

Lonely Planet போன்ற உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் புதிய “hidden gem”(“மறைந்த செல்வம்”) இடங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் யாழ்ப்பாணத்தையும் தேர்வு செய்துள்ளமை வரவேற்க வேண்டிய விடயம்.

"Hidden Gem" என்பது,பொதுவாக பரிசீலனை செய்யப்படாத, பயணிகள் குறைவாக அறிந்த இடங்களை குறிக்கிறது. அதாவது அழகும், சிறப்பும் நிறைந்த, ஆனால் பொதுவாக மக்களால் அறியப்படாத இடம் என்பதே அதன் பொருள்.

தற்போது Lonely Planet நிறுவனத்தின் தலைமையகம் Franklin, Tennessee, USAயில் அமைந்துள்ளது, மேலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயணிகள் அவர்களின் புத்தகங்களையும் இணைய தளத்தையும் பயன்படுத்துகின்றனர்.

Lonely Planet என்பது ஒரு சாதாரண சுற்றுலா நிறுவனம் அல்ல  அது உலகத்தை உணர வைக்கும் கதாபாத்திரம் மற்றும் இது உலகத்தை உணர வைக்கும் கதை சொல்லி. பயணத்தை ஒரு பொழுதுபோக்காக அல்லாது , ஒரு கல்வியாகவும் அனுபவமாகவும் மாற்றிய நிறுவனம் இதுவே.1973ல் தொடங்கிய ஒரு சிறிய புத்தகத்தின் பயணம் இன்று உலகமெங்கும் “பயண கலாசார புரட்சி”(Travel Cultural Revolution) ஆக மாறியுள்ளது. 

"Lonely Planet" ன் “Best in Travel 2026” பட்டியலில் இடம்பெற்ற 25 முக்கிய இடங்களின் ஒரு தொகுப்பு இது.

இடம் மற்றும் நாடு அல்லது பிரதேசம்

1PeruPeru-South America
2Jaffna-Sri Lanka 
3Maineb-USA 
4Cádizv-Spain 
5Réunion -French overseas department (Indian Ocean) 
6Botswana - Africa 
7Cartagena - Colombia 
8Finland -Europe 
9Tipperary -Ireland 
10Mexico City -Mexico 
11Quetzaltenango -Guatemala 
12British Columbia -Canada 
13Sardinia - Italy 
14LiberdadeSão Paulo - Brazil 
15Utrecht -Netherlands 
16Barbados -Caribbean 
17Jeju‑DoSouth - Korea 
18North Island -New Zealand 
19Theodore Roosevelt National Park - USA (North Dakota) 
20Quy Nhon - Vietnam 
21Siem Reap - Cambodia 
22Phuket - Thailand 
23Ikara‑Flinders Ranges & OutbackSouth - Australia 
24Tunisia- Africa / North Africa 
25Solomon - IslandsOceania 

"The world is a book, and those who do not travel read only one page." 
-Saint Augustine-

நா.இராஜமனோகரன்
02 November 2025

உலகலாவிய இரத்தம் பகிர்தல் (“blood-sharing”) என்ற போதை முறைமையும்,இலங்கையின் அதன் நிலையும்..!

🩸 “Sharing blood is not sharing love, it’s sharing death.”

போதைப் பழக்கங்களில் வினோதமான மற்றும் ஆபத்தான வழிகளில் ஒன்றாக இன்று காணப்படும் புதிய வழிமுறையாக “இரத்தம் பகிர்தல்” (blood-sharing) என்ற முறைமை காணப்படுகிறது. 

இந்த முறைமையில், போதைவஸ்து பயன்படுத்திய நபரின் இரத்தத்தை, இக்குழுவில் அல்லது பிற நபருக்கு உடனடியாக மாற்றிக் கொடுத்து, அதனூடாக போதை உணர்வு பெற முயற்சிப்பதை இது குறிக்கிறது. 

இது அதிகமாக ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. இதனை "ப்ளூடூத்திங்" (bluetoothing)அல்லது "ஹாட்-ஸ்பாட்டிங்" (Hot spotting) என சில ஊடகங்களால் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இதனை “blood-sharing”, “blood-swapping" அல்லது ஆய்வுகளில் காணப்படும் பெயரால் "flashblood" என்றும் குறிப்பிடப்படும்.

முதலில் போதை எடுத்தவரின் இரத்தத்தில் இயல்பாக போதை சார்ந்த இரசாயனங்கள் அல்லது ஊசியில் ஏற்றப்பட்ட பொருள் இருந்து கொண்டிருப்பதால், அவரின் இரத்தத்தை வேறு ஒருவருக்குள் செலுத்துகையில் அதில் உள்ள போதை ஏற்றப்பட்டவருக்கு உடனடி போதை உணர்வை அது ஏற்படுத்தும்.

முதலில் ஒரு நபர் (போதை நுகருநர்) முன்னர் எடுத்துள்ள போதை பொருள் அல்லது ஊசி மூலம் (intravenous) தனது இரத்தில் போதை சார்ந்த பொருளை எடுத்திருப்பார்.சிறிது நேரம் கழித்து, அவரது இரத்தத்தில் இருந்து சில மில்லி லிட்டர்கள்  ஊசி மூலம் எடுத்து அந்த இரத்தத்தை மற்ற நபருக்கு அல்லது பலருக்கு ஏற்றுவதன் மூலம் போதையை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு பகிரப்பட்ட இரத்தம் உடனடியாக அல்லது தாமதமாக போதை உணர்வை ஏற்படுத்தலாம், என்று சில செய்திகள் அல்லது ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.இதன் மூலம் பணம் மிச்சமாகிறது, குழுவாக பலர் பயன்படுத்தலாம் என்ற நோக்கமே இந்த செயல் நிலைக்கு காரணம் ஆகின்றது.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம், இரத்தம் என்பது மிக உயர்ந்த தொற்று நோய்களை பரப்பும் கருவியாகும்.இதன் மூலம் HIV/AIDS, Hepatitis B, Hepatitis C போன்றவை நேரடியாக அல்லது அதிக அளவில் பரவ வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரத்தம் மூலம் HIV தொற்று ஏற்படும் வாய்ப்பு 90 சதவீதத்திற்கு மேற்பட்டதாக உள்ளது என கூறப்பட்டுள்ளது. 

சாதாரண syringe sharingஐ விட இத்தகைய “இரத்தம் நேரடியாக பகிர்தல்” மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இங்கு, இரத்தம் நேரடியாக பகிர்தல் என்பது, சில போதைப்பொருள் பயன் நுகருநர் போதையின் "வலுவான தாக்கத்தை" (strong effect) பெற, மற்றொருவரின் இரத்தத்தை சிறிதளவு போதைப் பொருளில் கலந்து ஊசி வழியாக செலுத்துவார்கள்.இதை சில இடங்களில் "blood mixing" அல்லது"flashblood"என்று அழைக்கின்றனர்.

சமூகத்தில் இவ்வளவு ஆபத்தான பழக்கம் விரிவடைந்தால், பொதுச் சுகாதார சிக்கல்கள் நாட்டில் மேலும் பெருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, போதை பொருள் மற்றும் ஊசி சுத்தம், பகிர்தல் தொடர்பான கட்டுப்பாடு இல்லாத நாடுகளில் அதிகமான  இந்த செயல்கள் விரிவடைந்து வருவதாக செய்திகள் வெளியான உள்ளன. உதாரணமாக பசிபிக் தீவுகள், சில ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம்.

சில நாடுகளில்,உதாரணமாக Fiji,தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், லெசோத்தோ, தான்சானியா போன்ற நாடுகளில் இந்த  புதிய “போதைப் போக்கு” (trend)  அறிமுகமாகியுள்ளதாகவும், அதனால் HIV பரவலுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலை அதிகப்படியான போதைப் பயன்பாடு, சமூகவியல் அழுத்தம்,வசதி குறைவு போன்ற காரணங்களால் உருவாகுகிறது.

ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருவதாவது, இரத்தம் பகிர்தல் வழியாக HIV பரவலின் இருப்பு மற்றும் அதன் கண்காணிப்பு தொடர்பாக பல சவால்களை இந்த நாடுகள் எதிர்நோக்க வேண்டி உள்ளது என்பதையே.

எனவே,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதுடன் “இரத்தம் பகிர்தல் = மிக உயர்ந்த அபாயம்” என்பது மக்களுக்கு விளக்கப்பட  வேண்டும்.

போதை பழக்கத்தைக் குறைக்க தீர்மானமான நடவடிக்கைகள் (harm reduction) வேண்டியது மிக அவசியம். தெளிவான போதை ஒழிப்புக் கொள்கைகள், ஊசி பகிர்தல் தடுப்பு, மாற்று சிகிச்சைகள் என்பன தொடர்பில் நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

இரத்த பரிமாற்றம் (transfusion) மற்றும் போதை சார்ந்த இரத்த செயல்முறைகள் (non-medical blood sharing) ஆகியவற்றில் வேறுபாடுகளை உள்ளடக்கி  கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

இது தொடர்பில் ஆராய்ச்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு “இரத்தம் பகிர்தல்” என்ற செயல்திறன் எந்த அளவுக்கு உள்ளதென இலக்குகள், தரவுகள், பரவல் நிலை ஆகியவை தெரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையில் HIV பரவல் தன்மையில் “குறைந்த அளவிலான தொற்றுநோய்” (low-level epidemic) என்ற வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 15-49 வயது பிரிவினர் இடையே HIV பரவல் 
<0.1வீதம் என கருதப்படுகிறது. 

2011-ஆம் ஆண்டில் தகவல்களின் படி, இலங்கையில் இரத்த மூலமான மற்றும் ஊசி வழியாக HIV தொற்றின் சான்றுகள்  குறைவாக  உள்ளதாக அறியக் கிடைக்கிறது.“2008–09 ஆண்டுகளில் நாட்டில் இரத்தம் அல்லது இரத்தப் பொருட்கள் மூலம் தொற்று ஏற்பட்ட விவரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.” 

மேலும், இலங்கை இது தொடர்பில் “முக்கியமான மக்களிடையே” (key populations) படிப்படியாக தனது கவனத்தை செலுத்தி வருகிறது. உதாரணமாக, “Beach boys” என அழைக்கப்படும் கடற்கரையில் சுற்றுலாப் பணி செய்யும் துணை நபர்கள் இடையிலும் சில HIV அபாய பண்புகள் (sexual risk behaviours) இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

தற்போது கிடைக்கப் பெறுகின்ற அடிப்படையான இலங்கை ஆய்வுகளில் “இரத்தம் பகிர்தல்" (blood-sharing) என்ற  செயல்முறை (blood sharing among drug injectors) பற்றிய தரவுகள் குறைவாக அல்லது வெளிப்படையாக இல்லை என்றே கூறலாம்.

இருப்பினும், Intravenous Drug Use / User (IVDU)ன் போது ஊசி மூலம் பகிர்தல் என்ற தகவல்கள் சில இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

அதன்படி, இத்தகைய “இரத்தம் பகிர்த்தல்” போன்ற செயல் இலங்கையில் பொதுவாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தற்போது இல்லை என்றும், அதனால் நாட்டில் இது விசாலமாக பரவியிருப்பதாக எந்த  சான்றுகளும் காணப்படவில்லை என்பதும் தெரிகிறது.

எனினும், புதிதாக உருவாகும் இவ்வாறான செயல்முறைகள் குறித்து  பதிவு செய்யப்படாமையால் “ அபாயம் இல்லை” என்று முழுமையாக கூற முடியாது.

குறைந்த தகவல் அறிக்கை (under-reporting) மற்றும் குறைந்த கண்காணிப்பு, போதை நுகருநர்கள் (people who inject drugs = PWID) போன்ற வகுதியினரை  கண்காணிக்கும் தரவுகள் நம்மிடம் குறைவாகவே உள்ளன.

“இரத்தம் பகிர்தல்” எனும் புதிய வடிவமைப்பில் போதைச் செயல்பாடுகள்  இருப்பதால், அதற்கான ஆய்வுகள், தரவுகள், நடத்தை ஆய்வுகள்(behavioural surveys) தொடர்பில் இன்னும் முழுமையான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

இலங்கை மருத்துவ மற்றும் பொது சுகாதார அமைப்புகள், உதாரணமாக National STD/AIDS Control Programme போன்றவை இரத்தம் பகிர்தல் (blood-sharing) என்ற புதிய நடத்தை (new behaviour) பற்றிய தரமான கற்றல் (qualitative study) மற்றும் பரவல் பரிசோதனை,உயிரியல் நடத்தை ஆய்வு(bio-behavioural survey) என்பவற்றை மேற்கொள்ள வேண்டும்.

போதை நுகருநர்களுக்கு (PWID) இடையேயான ஊசி மூலம் பகிர்தல் மற்றும் “இரத்தம் நேரடியாக பகிர்தல்” போன்ற நிலைகளை கண்காணிக்கும் தகவல் தளங்கள் அல்லது பதிவு முறைமைகள் உருவாக்கப்பட வேண்டியது முக்கியம்.

சமூக விழிப்புணர்வு முறைமைகள் என்ற அடிப்படையில் “இரத்தம் பகிர்தல் என்பது மிக உயர்ந்த அபாயம்” என்பதை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொருவரினதும் கடப்பாடாகும்.போதைப் பழக்கம் இருப்பதே மிக ஆபத்தானது, அதனுடன் "இரத்தம் பகிர்தல்" போன்ற நடைமுறைகள் இணைந்தால் தனியாருக்கும் சமுதாயத்திற்குமான பாதிப்பு மிகவும் அதிகமாகும். எனவே "இங்கு எதுவும் நடக்காது" என்று ஆறப்போடுவது மிகவும் தவறு. விழிப்புணர்வு, தடுப்பு, உடனடி சிகிச்சை என்பன இதனை தடுக்கும் வழிமுறைகளாகும்.

“When blood becomes the drug, humanity begins to fade.”

நா.இராஜமனோகரன்
11 November 2025

 போதை...பேரரசின் பேராசை!



“You may lose a battle, but never lose the reason you fight.”

ஒரு தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அதன் மண்ணில் முளைவிடும் தலைமுறைகளின் மனநிலையால் தீர்மானிக்கப்படுகிறது. போர்க்களத்தில் பீரங்கிகள் முழங்கி, பல உயிர்களின் குருதிச் சகதியில் ஒரு நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றலாம். ஆனால், ஒரு நாட்டின் அறிவையும், ஆன்மாவையும், எதிர்காலத்தையும் அழிக்க, குண்டுகள் தேவையில்லை. போதையே போதும் என்பதை, வரலாறு நமக்கு ஏற்கனவே கற்றுக் கொடுத்திருக்கிறது.

அதன் மிகத் தெளிவான உதாரணம்  பிரித்தானிய பேரரசு. உலகம் முழுவதும் “சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம்” என பெருமைப்பட்ட இங்கிலாந்து, தன் பேராசைக்காக இரு மாபெரும் நாகரிகங்களை ,இந்தியாவையும் சீனாவையும் ,வேறு வேறு விதமாக உலுக்கியது. சீனாவை அபின் என்ற விஷத்தால் மயக்கி சீரழித்தது,அந்த விஷத்தை விளைவிக்க, இந்திய விவசாயிகளை அடிமைப்படுத்தி தங்கள் வளமான நிலங்களில் உணவுக்கு பதிலாக போதைப் பயிரை வளர்க்க கட்டாயப்படுத்தி திணித்தது.

வரலாற்றில் இந்தக் கொடூரமான உத்தியை மிகத் துல்லியமாக, மிக மிகக் கொடூரமாக அரங்கேற்றியது  பிரித்தானிய பேரரசு.

"பிரித்தானி சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைந்தே இல்லை" என  பிரித்தானிய ஆர்பரித்தது தொடர்பில், ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தெரிந்த கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது "பிரித்தானியர்களை இருட்டில் விட இறைவனுக்கே பயம்" என்பதே அது.

பெர்னார்ட் ஷா பிரித்தானிய பேரரசின் ஆணவத்தையும் பேராசையையும் நையாண்டி செய்த கூற்று அது.அதன் ஆழமான பொருள், பிரித்தானியர்கள் எங்கு சென்றாலும் ஆக்கிரமிப்பு, இலாப நோக்கம், சுரண்டல், கலாசார அழிப்பு போன்ற மாற்றங்களை ஏற்படுத்தினர்.அவர்கள் இருக்கும் இடம் முழுவதும் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றிகளாய் செயல்படுட்டார்கள்.
அத்தகைய பிரித்தானியார்களை "இருட்டில்" (அதாவது தனது கட்டுப்பாட்டிற்கு வெளியே) விடுதல் இறைவனுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவர்கள் என்பதே அவரின் நையாண்டி ஆகும்.இதுவே பெர்னார்ட் ஷாவின் மேற்கோளின் கசப்பான உண்மையும் கூட. இப்படிப்பட்ட பிரித்தானியாவின் இந்த கொடூர நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது சீனா.அதனை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அபின் (Opium). அந்த ஆயுதம் விளைவிக்கப்பட்ட இடம் இந்தியா.

இன்று நாம் பார்க்கும் வரலாறு, சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானம்’ (Century of Humiliation) பற்றியும், அதில் இந்தியாவின் இரத்தமும், இந்தியத் தொழிலதிபர்களின் (டாட்டா உட்பட) மறைக்கப்பட்ட பங்கும் பற்றிய ஒரு கசப்பான வரலாற்றைத்தான்.18-ம் நூற்றாண்டில், சீனா உலகப் பொருளாதாரத்தின் ஒரு தனித்தீவு போல இருந்தது. சீனப் பேரரசர்கள், "எங்களுக்குத் தேவையான அனைத்தும் எங்களிடமே உள்ளன. காட்டு மிராண்டிகளான வெளிநாட்டவர்களிடம் இருந்து எங்களுக்கு எதுவும் தேவையில்லை" என்ற கர்வத்துடன் தங்கள் வணிகக் கதவுகளை மூடி வைத்திருந்தனர். ஆனால், பிரித்தானியாவுக்கு சீனா அவசியமானதாக இருந்தது காரணம், தேயிலை,பட்டு,பீங்கான் (Porcelain) என்பன. குறிப்பாக,இங்கிலாந்து மக்களுக்குத் 'தேயிலை' ஒரு வெறியாகவே மாறியிருந்தது. அவர்கள் சீனாவிலிருந்து தொன் கணக்கில் தேயிலையையும், பட்டுத் துணிகளையும், பீங்கான் பாத்திரங்களையும் இறக்குமதி செய்தனர். இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. பிரித்தானியா, சீனாவிடமிருந்து பொருட்களை வாங்கியது. ஆனால், சீனா பிரித்தானியாவிடமிருந்து எதையும் வாங்க மறுத்தது."உங்கள் கம்பளித் துணிகள் எங்களுக்கு வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள். இதனால், பிரித்தானியா தன்னிடம் இருந்த வெள்ளி மற்றும் தங்கத்தைக் கொடுத்துத்து தேயிலையை வாங்க வேண்டியிருந்தது. இதனால், பிரித்தானிய கஜானா காலியானது. இதனை ’வர்த்தகப் பற்றாக்குறை’ (Trade Deficit) என்பார்கள். இதைச் சரிசெய்ய பிரித்தானியா ஒரு நயவஞ்சகத் திட்டத்தைத் தீட்டியது ,"சீனர்களுக்கு விற்பதற்கு நம்மிடம் ஒரு பொருள் வேண்டும். அவர்களால் மறுக்க முடியாத ஒரு பொருளாக அது இருக்க வேண்டும்." என்பதே அது.என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள். அந்த சிந்தனையில் அவர்கள் கண்டுபிடித்த அந்தப் பொருள்தான் அபின் (Opium). '

'அபின்' என்பது ஒரு வகைப் போதைப் பொருள். இது பாப்பி (Poppy) செடியிலிருந்து கிடைக்கிறது. இதை விளைவிக்கச் சிறந்த இடம் எது? அவர்கள் தேர்ந்தெடுத்தது பிரித்தானியாவின் காலனித்ததுவ நாடுகளில் ஒன்றான  இந்தியாவைத் தான்.

கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியாவின் வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் இருந்த ஏழை விவசாயிகளை மிரட்டி."நீங்கள் நெல் பயிரிடக் கூடாது, கோதுமையை விளைவிக்கக் கூடாது. அபின் மட்டுமே பயிரிட வேண்டும்." விவசாயிகள் மறுத்தால், அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. 

உணவு விளைவிக்க வேண்டிய நிலங்களில், விஷம் விளைவிக்கப்பட்டது.

பிரித்தானியா, இந்திய விவசாயிகளை அடிமைப்படுத்தி அபினை விளைவித்தது. அந்த அபினை, சீனாவிற்குக் கடத்திச் சென்று விற்று, அதற்குப் பதிலாகச் சீனர்களிடமிருந்து வெள்ளி நாணயங்களைப் பெற்றது. அந்த வெள்ளியைக் கொண்டு, சீனாவிலிருந்து தேயிலையை வாங்கி, அதை இங்கிலாந்துக்கு அனுப்பியது.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டி, சீனர்களின் அறிவை மழுங்கடித்து, பிரித்தானியா தனது தேநீர் கோப்பையை நிரப்பி மகிழ்ந்து கொண்டது.

பிரித்தானியா, அபினை நேரடியாகச் சீனாவிடம் விற்கவில்லை. ஏனென்றால் சீனாவில் அபின் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கடத்தல்காரர்கள் மூலம் இதைச் சந்தைப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்ட அபின், விரைவில் ஒரு பழக்கமாகி, பின்னர் ஒரு வெறியாக மாறத் தொடங்கியது. 

1830-களில், சீனாவின் அரசு அதிகாரிகள், இராணுவ வீரர்கள், மாணவர்கள், சாதாரணக் கூலிகள் எனச் சுமார் 1.2 கோடி சீனர்கள் அபினுக்கு அடிமையாகியிருந்தார்கள். அபின் போதையால் சீனச் சமூகம் சீரழியத் தொடங்கியது. குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. சீனாவின் வெள்ளிப் பணம் முழுவதும் பிரித்தானியாவுக்குள் பாய்ந்தது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம், புகைப்பிடிக்கும் குழாய்களுக்கு முன்னால் மயங்கிக் கிடந்தது.

சீனப் பேரரசர் இதைக் கண்டு கொதித்தெழுந்தார். இதை அடக்க அவர் லின் ஜெக்சு (Lin Zexu) என்ற ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்தார். லின் ஜெக்சு, 1839-ல், பிரிட்டிஷ் வியாபாரிகளிடமிருந்த 20,000 பெட்டி அபினைக் கைப்பற்றி, அதைக் கடலில் கரைத்து அழித்தார்.

அத்துடன்,விக்டோரியா மகாராணிக்கு, "எங்கள் மக்களை அழிக்கும் இந்த விஷத்தை ஏன் விற்கிறீர்கள்?" என்று ஒரு கடிதமும் எழுதினார். பதிலுக்கு பிரித்தானியா என்ன செய்தது? மன்னிப்பு கேட்டதா? இல்லை!

"எங்கள் சொத்துக்களை (அபினை) அழித்துவிட்டீர்கள்! தடையற்ற வர்த்தகத்தைத் தடுத்துவிட்டீர்கள்!" என்று கூறி, பிரிட்டன் தனது நவீனக் கடற்படையைச் சீனாவுக்கு அனுப்பியது.


சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் போர் தொடங்கியது. இதுவே முதல் "அபின் போர்" (First Opium War) (1839-1842).எனப்பட்டது.

பழைய வாள்களையும், ஈட்டிகளையும் வைத்திருந்த சீன இராணுவம், பிரித்தானியாவின்  நவீனப் பீரங்கிக் கப்பல்களை எதிர்க்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. சீனா சரணடைந்தது. அவமானகரமான 'நான்ஜிங் ஒப்பந்தத்தில்’ (Treaty of Nanjing) கையெழுத்திட்டது.(The Treaty of Nanking (or Nanjing), signed August 29, 1842)


அந்த ஒப்பந்தத்தம் சீனாவிற்கு பல பொறிகளை வைத்தது.

* சீனா, பிரிட்டனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்பது,இதனால் சீனா 2.1 கோடி யுவான் (21 million silver dollars) மதிப்பிலான இழப்பீட்டை இங்கிலாந்துக்கு கட்ட வேண்டியிருந்தது

* சீனத் துறைமுகங்களை பிரித்தானியாவிற்குத் திறக்கப்பட வேண்டும்.அதில் ஐந்து முக்கிய துறைமுகங்களை, அதாவது குவாங்சோ, ஷியாமென், ஃபூஷோ, நிங்போ, ஷாங்காய் ஆகிய துறை முகங்களை பிரித்தானி வணிகத்துக்கு திறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

*சீனா தானாக விரும்பியபடி சுங்கவரி விதிக்க முடியாது. பிரித்தானியா விதிகளுக்கு இணங்க சுங்கவரி நிர்ணயிக்க நேரிட்டது.

*பிரித்தானிய குடிமக்கள் மீது சீன சட்டம் நேரடியாகப் பொருந்தாது. அவர்களுக்கு தனி சட்ட பாதுகாப்பு (extraterritorial rights) கிடைத்தது.

* மிக முக்கியமாக, ஹாங்காங் (Hong Kong) தீவு, பிரித்தானியாவிற்கு சொந்தமாக்கப்பட்டது.

இதுதான் சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானத்தின்’ (Century of Humiliation) தொடக்கம்.

இப்போது, இந்த வரலாற்று நிகழ்வில் இந்தியவின் பங்கை நோக்கின், பிரித்தானியா அபினை விளைவித்தது சரி, அதைச் சீனாவுக்குக் கொண்டு சென்று விற்றது யார்?

பிரித்தானியக் கப்பல்கள் மட்டுமல்ல. பல இந்திய வர்த்தகர்களும் இதில் ஈடுபட்டனர். குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த பார்சி (Parsi) மற்றும் மார்வாடி சமூகத்தினர் ஆவர். அவர்களில் முக்கியமானவர்கள் டாட்டா (Tata) மற்றும் ஜீஜீபாய் (Jeejeebhoy) குடும்பத்தினர். பார்சி இனத்தவரான டாட்டா குடும்பத்தினர் இப்படித்தான் செல்வம் கொழிக்கத் தொடங்கினார்கள்.

ஜாம்செட்ஜி டாட்டா (Jamsetji Tata), நவீன இந்தியத் தொழில்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். இவரது தந்தை நுஸர்வான்ஜி டாட்டா மற்றும் ஜாம்செட்ஜி டாட்டா ஆகியோர், தங்கள் ஆரம்பகால மூலதனத்தை, சீனாவுடனான அபின் வர்த்தகத்தில் தான் ஈட்டினார்கள்.

அவர்கள் குஜராத் மற்றும் மால்வா பகுதிகளில் விளைந்த அபினை, கப்பல்களில் ஏற்றிச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தனர். "டாட்டா அண்ட் கோ" என்ற பெயரில் ஷாங்காய் நகரில் கிளை அலுவலகம் கூடத் திறக்கப்பட்டது.

இந்த அபின் வர்த்தகத்தில் கிடைத்த அந்த அபரிமிதமான இலாபம் தான், பின்னாளில் இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலை (Tata Steel), தாஜ் ஹோட்டல், மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்கான மூலதனமாக (Capital) மாறியது.

மும்பை நகரம் இன்று ஒரு பிரம்மாண்டமான வர்த்தக மையமாக இருப்பதற்கு, அன்று சீனாவில் விற்கப்பட்ட அபினின் பங்கும் உண்டு என்பது மறுக்க முடியாத, கசப்பான உண்மை. டாட்டா மட்டுமல்ல, பல பார்சி மற்றும் மார்வாடி வர்த்தகக் குடும்பங்கள் இந்த வழியில் தான் வளர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சீனா ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறது? ஏன் தைவான் விஷயத்திலும், தென் சீனக் கடலிலும் பிடிவாதமாக இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள, நாம் இந்த வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும்.

சீனப் பள்ளிகளில் இன்றும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் முதல் பாடம் எது தெரியுமா,'நூற்றாண்டு அவமானம்’. ’நாம் பலவீனமாக இருந்தோம்; அதனால் போதை மருந்து கொடுத்து நம்மை அழித்தார்கள். நம் நிலங்களைப் பறித்தார்கள். இனி ஒருபோதும் சீனா அப்படி ஏமாறக் கூடாது. இனி ஒருபோதும் சீனா பலவீனமாக இருக்கக்கூடாது.’

ஜி ஜின்பிங் பேசும், "சீனக் கனவு" (Chinese Dream) என்பது, இந்த 150 ஆண்டுகால அவமானத்தைத் துடைத்து, மீண்டும் உலகத்தின் உச்சிக்குச் செல்வதுதான்.

வரலாறு விசித்திரமானது.

அன்று இந்தியா விளைவித்த அபின், சீனாவை அழித்தது.

அன்று ஈட்டிய இலாபம், இந்தியாவின் நவீனத் தொழில்துறைக்கு அடித்தளமிட்டது.

அன்று அவமானப்பட்ட சீனா, இன்று அந்த வடுக்களைச் சரிசெய்ய, உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

"வரலாற்றை மறப்பவர்கள், அதை மீண்டும் வாழச் சபிக்கப்படுவார்கள்" என்பதுதான் உண்மை.இது சீனாவிற்கு மட்டுமல்ல, தமிழ் இனத்துக்கும் பொருந்தும்.

"வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் மிகக் கடினமானது. ஓர் இனத்தை வேரறுக்கப் பெரும் போர் தேவையில்லை,போதை ஒன்றே போதும்" என்பது சீன வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம். அன்று சீனா அபின் புகையில் சரிந்தது, இன்று நம் நாடும், இளைஞர்களும் கஞ்சா புகையிலும், ஐஸ் போதையிலும், மதுவின் பிடியிலும் சிக்கித் தள்ளாடுகிறனர்.

அன்று சீனாவைச் சீரழிக்க பிரித்தானியா எனும் அந்நிய சக்தி இருந்தது. ஆனால் இன்று? நம் சொந்த மண்ணிலேயே, நம் வருங்காலத் தலைமுறையானது, கல்வி கற்க வேண்டிய வயதில் போதைக்கு அடிமையாகி, சிந்தனை மழுங்கி வீதியில் திரிகிறது. அன்று குடித்தாலே பாவம், தவறு என்று யாருக்கும் தெரியாமல் மறைத்துக் குடித்தார்கள். ஆனால், இன்று மீசை முளைப்பதற்கு முன்பே வீதியோரங்களில் அமர்ந்து குடித்துக் களிக்கிறார்கள் நமது விடலைகள்.பொறுப்புள்ள சமூகப் பெரியவர்கள் இதை கண்டு இன்று ஒதுங்கிப் போகின்றனர்.

நூற்றாண்டு கால அவமானத்திலிருந்து (Century of Humiliation) சீனா மீண்டு, இன்று வல்லரசாகிவிட்டது. 

ஆனால், உலகம் போற்றும் அறிவுச் சமூகமாகத் திகழ்ந்த தமிழினம், இன்று தன் இளைய தலைமுறையைப் போதைக்குப் பலிகொடுத்து விட்டு, மீள முடியாத இருளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. உலகிற்கே வணிகத்தையும், அறத்தையும் கற்றுக்கொடுத்த ஓர் அறிவுச் சமூகம், தமது இருப்புக்காக, சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் சமூகம் இன்று போதைப் பிடியில் சிக்கித்  தன் சுயத்தை இழந்து புத்தி மழுங்கி கத்தியுடன் நிற்பது தான் காலத்தின் கோலம்.

அன்று பிரித்தானியர் அபினைக் கொண்டு சீனாவை அழித்தார்கள். சீனா போதை பொருளால் வீழ்ந்த சாம்ராஜ்ஜியமாகியது. பிரித்தானியா செய்த வரலாற்றுத் துரோகம் இது!இன்று பிரித்தானியா தன்னை மனித உரிமைகளின் மீட்பாராகவும், ஜனநாயகத்தின் வழிகாட்டியாகவும் காட்டி நிற்கிறது.

ஆனால், இன்று பேராசை கொண்ட நபர்களும், குழுக்களும் எமது இளைஞர்களை,சிறுவர்களை ஐஸ் போதை மயக்கத்திலும், மது போதையிலும் தள்ளி வேரறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

'நம் பிள்ளைகளுக்குப் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைப்பதை விட, போதையில்லாத தெளிவான புத்தியையும், சுயமரியாதையையும் சேர்த்து வைப்பதே மிகச் சிறந்த சொத்து. இல்லையேல், நாளைய வரலாறு நம்மை கேலி செய்யும்.  'போதையால்  வீழ்ந்த இனம்' என்றே பதிவு செய்யும்!'

ஒரு இனத்தைக் காப்பது அதன் இளைஞர்களை காப்பதில் தொடங்குகிறது.

அது அனைத்து சமூக கட்டுமானங்களினதும் பொறுப்பு!

மிளிரும் வீடுகளும்,பெறுமதியான வாகனங்களும், ஆடம்பர வாழ்வும் சமூக ஆரோக்கியத்தை பிரதிபலிக்காது.சமூக ஆரோக்கியம் பகுத்தறிவும் தெளிவான சிந்தனையுடன் அயலவனை நேசிக்கும் பண்புள்ள சமூகமாக வளருவதே ஆரோக்கியமானது.

வரலாறு எம்மை எச்சரிக்கிறது
“போதையால் வீழ்ந்த ஒரு இனம், ஒருபோதும் தன் எதிர்காலத்தை சிறப்பாக கட்டியெழுப்ப  முடியாது.” என்று.

அன்று சீனாவே அபினால் வீழ்ந்தது. இன்று அதே சூழலின் நிழல் நம் சமூகத்தையும் மூடியுள்ளது. நாமாக விழித்தெழ வேண்டும்.  இதற்கான பொறுப்பு பெரியவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மத தலைவர்கள், அரசு, எல்லோருடையதும் தான்.

இல்லையேல்… வரலாறே நம்மைப் பற்றிக் இவ்வாறு கூறும்:
“தம் தலைமுறையைப் பாதுகாக்கத் தவறியதால் வீழ்ந்த இனம் ஒன்று இங்கு இருந்தது” என்று.

"Humiliation does not break a nation; it awakens it.”

நா.இராஜமனோகரன்
08 December 2025