Sunday, November 2, 2025

 GovPay அடுத்தகட்ட தொழில்நுட்ப நகர்வு...



இலங்கையின் டிஜிட்டல் கட்டண முறையான GovPay, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) நோக்கிய உலகளாவிய போக்கை இங்கு பிரதிபலிக்கிறது, ஆனால் அதன் வெற்றி சைபர் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் பொது நம்பிக்கையில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை  பொறுத்தது அதன் வெற்றி அமையும்.

சரி,

நீங்கள் சாரதியாக இருக்கும்பட்சத்தில் இலங்கையில் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த தண்டத்தை செலுத்துவதை கற்பனை செய்து பாருங்கள்!

நீங்கள் தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம், வரிசையில் நிற்க வேண்டாம், காவல் நிலையத்திற்குத் செல்லவேண்டிய அவசியமில்லை. ஏப்ரல் 2025 இல் சோதனை முறையில் தொடங்கப்பட்ட ஒரு புரட்சிகரமான Digital கட்டண முறையான GovPay உடன் இது இப்போது ஒரு யதார்த்தமாகிவிட்டது.

ICTA மற்றும்  Digital அமைச்சகத்தால், இலங்கை காவல்துறை மற்றும் LankaPay உடன் இணைந்து, GovPay, வாகன ஓட்டுநர்கள் கைபேசி வங்கி செயலிகள் மற்றும் இணைய வங்கி மூலம் உடனடியாக அபராதம் செலுத்த இது அனுமதிக்கிறது!

பெரும்பாலும்  வீதியோரத்தில் இருக்கும்போதே இதை நீங்கள் செய்யமுடியும் என்பது தான் இதன் இலகு நிலை.

சுருங்கக் கூறின்!,

"இலங்கையில் GovPay என்பது அரச சேவைகளுக்கான பணப்பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தும் ஒரு நிகழ்நிலைக் கட்டண தளம்" ஆகும். 

இது 2025 பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இலங்கையின் Digital  பொருளாதார மாற்றத்தின் முக்கிய அங்கமாகும் இது பார்க்கப்படுகிறது.

GovPay-இன் முக்கிய அம்சங்கள்
(Key Features of GovPay)

1.மையப்படுத்தப்பட்ட கட்டண தளம் 
(Centralized Payment Platform)

GovPay, ICTA மற்றும் LankaPay இணைந்து உருவாக்கிய ஒரு ஒருங்கிணைந்த கட்டண தளம் ஆகும்.

2.பல்வேறு கட்டண முறைகள்
(Multiple Payment Methods)

வங்கி கணக்குகள், கார்டுகள், மற்றும் digital wallets. போன்ற பல்வேறு முறைகள் மூலம் கட்டணங்களை நீங்கள் செலுத்தலாம்.

3.பயனுகருநர் நட்பு அனுபவம் 
(User-Friendly Experience)

எளிமையான இடைமுகம் மற்றும் விரைவான பரிவர்த்தனைகளுடன் பயனுகருநர்ளுக்கு வசதியான அனுபவத்தை இது வழங்குகிறது.

4.பயன்பாட்டுத் தளங்கள்
(Access Platforms)

GovPay தளத்தை வங்கி செயலிகள், LANKAQR மற்றும் இணையதளம் மூலமாக அணுகலாம்.

5.பரிமாற்றக் கட்டணங்கள்( Transaction Fees)

பரிவர்த்தனை கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன( ரூ.50 இலிருந்து ரூ.15 வரை.)

GovPay ஆனது எமக்கு வேலையில் இருந்து விடுப்பு எடுப்பது அல்லது அபராதம் செலுத்த நீண்ட தூரம் பயணம் செய்வது போன்ற நாட்களை இல்லாது செய்கிறது.  பணம் செலுத்துவதிலிருந்து வாகனஉரிமத்தை திரும்பப் பெறுவது வரையிலான முழு செயல்முறையும் இப்போது குறித்த இடத்திலேயே நிகழலாம்.

டிஜிட்டல் சிட்டைகள் ஓட்டுநர் மற்றும் அதிகாரி இருவருக்கும் உடனடியாக அனுப்பப்படுகின்றன. இது இலஞ்சம் அல்லது கையூட்டுக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. இது சட்ட அமுலாக்கம் மற்றும் அரசு சேவைகளில் பொதுமக்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்புகிறது.

Hela Payமற்றும் iPay போன்ற பிரபலமான நிதி தொழில்நுட்ப பயன்பாடுகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், GovPay பலருக்கு அணுகக்கூடியதாக உள்ளது. இது ஒரே நேரத்தில் பல அபராதம் செலுத்துதல்களுக்கு வழிவிடுகின்றது.மற்றும் பயனுகருநர் அனுபவத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.GovPay மக்களை முறையான நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட ஊக்குவிக்கிறது என்பதுடன், இது பணப்புழக்கம் மற்றும் பரந்த நிதி உள்ளடக்கத்திற்கும் உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி, மிக முக்கியமாக, GovPay ஒரு நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகிறது . அரசாங்க சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களை ஒரு விதிமுறையாக இது மாற்றுகிறது. இது இலங்கை முழுவதும் பரந்த நிநி  தொழில்நுட்பத்திற்கான  அடித்தளமாக இது அமையலாம்.

சிலர் இன்னும் பணத்தின் பரிவத்தனையையே விரும்புகிறார்கள் என்பதுடன், மேலும் டிஜிட்டல் அணுகல் குறித்த பிரச்சினைகளும் உள்ளன, குறிப்பாக முதியவர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே இது காணப்படுகிறது. தபால் துறை போன்ற பாரம்பரிய சேவைளுக்கு இதனால் ஏற்படும் வருவாய் இழப்புகளைக் குறைக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

பொதுவாக சில சவால்களை இங்கு குறிப்பிடலாம்...

1. தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு சவால்கள்

2. ஒழுங்குமுறை மற்றும் சட்ட ரீதியான சவால்கள்

3. பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் நிதி உள்ளடக்கம்

4. பணம் செலுத்தும் பழக்கவழக்கங்களில் மாற்றம்

5. போக்குவரத்து அபராதங்கள் தொடர்பான சவால்கள்

6. பாரம்பரிய சேவைகள் மீது தாக்கம்
   
எவ்வாறாயினும், ஏப்ரல் 30, 2025 க்குப் பிறகு இந்த அமைப்பு நாடு தழுவிய அளவில் விரிவடைவதால், பல்வேறு விருப்பங்களை கவனத்தில் கொண்டு டிஜிட்டல் கல்வியறிவை விரிவுபடுத்துவதும் அவசியம்.

நா.இராஜமனோகரன்
22 April 2025

 "வர்த்தகப் போருக்கான சுழல் காற்று" 



"The Renminbi is not just a currency; it’s a reflection of China’s global ambition."

டிரம்பின் பொருளாதார நடவடிக்கையால் ஒரு வர்த்தகப் போருக்கான சுழல் காற்று வலுப்பெற்று வருவது அவதானிக்கக் கூடிய ஒன்று.

இதன் காரணமாக ஏற்பட்ட ஒரு விளைவு சீன மக்கள் வங்கியானது திடீரென டிஜிட்டல் RMB (Renminbi, Chinese Yuan) எல்லை கடந்த தீர்வாக, பத்து ASEAN நாடுகள் மற்றும் ஆறு மத்திய கிழக்கு நாடுகளுடன் முழுமையாக இணைக்கப்படும் என்று அறிவித்ததுள்ளது. 
அதாவது உலகின் வர்த்தக அளவின் 38% அமெரிக்க டாலரால் ஆதிக்கம் செலுத்தப்படும் SWIFT அமைப்பைத் தவிர்த்து நேரடியாக " digital RMB moment "ல் நுழையும். 

இதனை பொருளாதார நிபுணர்கள் "Bretton Woods System 2.0 Outpost Battle", என்று அழைக்கின்றனர். ("பேட்டின் வூட்ஸ் சிஸ்டம் 2.0 அவுட்போஸ்ட் பற்றில்" என்பது உலகளாவிய நாணய அதிகாரத்தில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும் ஒரு சக்திவாய்ந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார வெளிப்பாடாகும். பாரம்பரிய அமெரிக்க தலைமையிலான நிதி அமைப்பின் ஆதிக்கத்திற்கு எதிராக எழும் சவாலை விவரிக்க தி எகனாமிஸ்ட் போன்ற வெளியீடுகளால் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.)

"The Economist" இதனை புதிய உலக நாணய ஒழுங்கின் ஆரம்பப் போர் (This as the opening battle of a new global monetary order).என்று வர்ணிக்கிறது.

மேலும்,SWIFT என்பது உலகளாவிய பரிவர்த்தனைக்கான கணினி வலைமைப்பாகும். இது பெரும்பாலும் அமெரிக்க டாலரை மையமாக கொண்டு செயல்படுவதால் அதில் இருந்து விலகி, டிஜிட்டல் ரென்மின்பி வழியாக நேரடி பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும் என்பதுதான் சீனாவின் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தை விளங்கிக்கொள்ள சீனாவின் Digital RMB (Digital RMB = Digital Renminbi (e-CNY)) பற்றி நாம் சுருக்கமாக பார்க்கலாம்.

Digital RMB என்பது சீனாவின் மத்திய வங்கி வெளியிடும் ஒரு மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) ஆகும்.

இது பரம்பரிய பணத்திற்கு மாற்றானது அல்ல, ஆனால் மின்னணு வடிவில் அரசு நிர்வகிக்கும் பணம்.இது Blockchain-ஐ (தகவல்களை (data/transactions) பாதுகாப்பாகச் சேமிக்கும், மாற்ற முடியாத, மையமில்லாத, தொகுதி வடிவமைப்பில் இயங்கும் ஒரு நவீன தொழில்நுட்பம்.) பயன்படுத்தி இயங்குகிறது.Digital RMB பொதுவாக Blockchain-இல் இயங்குகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் இது Permissioned Blockchain அல்லது Hybrid System ஆகும். அதாவது முழுமையாக மையமில்லாதது அல்ல.China’s e-CNY is centrally controlled கொண்டது. அது முக்கியமாக சீன மத்திய வங்கியால் பராமரிக்கப்படும் தனிப்பட்ட வலைப்பின்னல் ஆகும்.

இது அதிக வேகமான, குறைந்த கட்டணமுடைய, பாதுகாப்பான பரிவர்த்தனையை வழங்குகிறது.

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதை சாதாரண செயலி அல்லது வங்கி கணக்குகள் வழியாக பயன்படுத்த முடியும்.

இதே போல SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) ஆனது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனை செய்திகளை பரிமாறும் இணையம் ஆகும். இதில் 11,000 மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன.இதனூடாக பெரும்பாலும் பரிவர்த்தனைகள் அமெரிக்க டாலர் வழியாகவே நடைபெறுகின்றன.SWIFT ஆனது அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தின் முக்கியமான கருவியா இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவானது SWIFT வழியாக தனது எதிரி நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை (sanctions) விதித்து வருகின்றது.இதன் விளைவாக தான் சீனா இதற்கு மாற்றாக RMB-ஐ உலக நாணயமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. SWIFT-ஐ புறக்கணிப்பதன் ஊடாக, சீனாவின் RMB முன்னிலைப்படுத்த இது உதவலாம். இதனால் உலக பொருளாதாரத்துக்கு இந்த நடவடிக்கை பல மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு எதிர்பார்க்கும் மாற்றங்களாக சிலவற்றை குறிப்பிடலாம்!

1.அமெரிக்க டாலரின் தேவையை இது குறைக்கும்.

2.சீனாவின் ரென்மின்பி (RMB) ஒரு சர்வதேச வர்த்தக நாணயமாக மாறும்.

3.வாடிக்கையாளர்களும், வணிக நிறுவனங்களும் மிக விரைவாக பண பரிமாற்றம் செய்ய முடியும். ( China-Indonesia "Two Countries, Two Parks" திட்டத்தில், Industrial and Commercial Bank of China (ICBC) முதல் முதலில் எல்லை கடந்த கட்டண நடவடிக்கையை முடிக்க டிஜிட்டல் RMB ஐப் பயன்படுத்தியது, இது கட்டளை உறுதிப்படுத்தலில் இருந்து நிதி வருவதற்கு 8 வினாடிகள் மட்டுமே எடுத்தது, இது பாரம்பரிய முறைகளை விட 100 மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.)

4.Blockchain பயன்படுத்துவதால், பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் வசதியாக இருக்கும்.

5.அரசியல் பாகுபாடுகள் (sanctions) செயலிழக்க வாய்ப்பு உள்ளது – காரணம் அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள SWIFT இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையை இது ஏற்படுத்தும்

இது வெறும் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல;
உலகளாவிய அரசியல், நாணய ஆதிக்கம் மற்றும் பன்முக பொருளாதார அமைப்பின் இயக்கவியல் ஆகியவற்றை மறு வடிவமைக்கும் ஒரு பெரிய மாற்றமாகும்.

Digital RMB சீனா உருவாக்கியதன் நோக்கங்கள்:

1. உலகளாவிய பரிவர்த்தனையை அமெரிக்க டாலரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க(US Dollar மீதான அடிமைத் தன்மையை குறைக்க.)

2. மொபைல் பணத்திற்குள் அரசின் கண்காணிப்பினைக் கொண்டுவர.

3. பணமதிப்பை கையாளும் தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த. (அதாவது Alipay, WeChat Pay மீது கட்டுப்பாடு)

4. சர்வதேச வர்த்தகத்தில் RMB-ஐ ஒரு நாணயமாக மாற்ற.

5. கடன், ஊதியம், திட்ட நிதிகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிக்க.

போன்ற காரணங்களுக்காக RMB உருவாக்கப்பட்டது. இதனால் சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் மையப் பங்கிற்கு இது வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புதிய நிதி சூழல் எனலாம்.
“cashless”, “borderless”, “state-controlled” economy என்று நாம் இதனை குறிப்பிட முடியும்.

இவற்றை தவிர RMB நோக்கி நாடுகள் நகர்ந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை வளர்முக நாடான எமது நாட்டை அடிப்படையாக வைத்து நோக்குவோம்.

சீன யுவான் (RMB) நோக்கி இலங்கை சாய்ந்தால் ஏற்படும் விளைவுகள்....

1. அந்த நாணயத்தில் தங்கியிருக்க வேண்டி (Currency Dependence) எமக்கு ஏற்படும்.இலங்கை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக RMB பயன்படுத்தத் தொடங்கினால்,நாணய வீச்சில் (exchange rate volatility) அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

சீனாவின் உள்நாட்டு பொருளாதார நிலைமைகள் இலங்கை நாணயத்தையும் பாதிக்கக்கூடும்.

2. RMB-யில் கடன்கள் பெற்றால், சீனாவின் நிபந்தனைகள் கடுமையானதாக இருக்கலாம்.கடன் அடைக்க முடியாத நிலையில், சொத்துக்களை (துறைமுகம், நிலம்) சீனா கைப்பற்றும் Debt Trap Diplomacy ஆபத்து இதில் உள்ளது.

3. உலக நாணய மையத்திலிருந்து இலங்கை விலகும் போது,மேற்கத்திய நிதி ஆதரவு (IMF, World Bank) போன்றவை மெதுவாக இலங்கையை கை கழுவி விடும் சாத்தியம் உள்ளது.

அதன் பின் இலங்கை, ஒரு நாட்டின் பிடியில் தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ளது.

4. தந்திரோபாய நெகிழ்வுத்தன்மை இழப்பு(loss of strategic flexibility ) காரணமாக, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளுடனான நாணய மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு குறைவதற்கான ஆபத்து உள்ளது.இது உலக அரங்கில் இலங்கையின் பரந்த புவிசார் அரசியல் ஈடுபாடு மற்றும் இராஜதந்திர சமநிலையையும் பாதிக்கலாம்.

5. RMB சார்பு அதிகமானால், சீனாவின் அரசியல் ஆதிக்கமும் அதிகரிக்கும்.புவியியல் தலையீடுகள் (Geopolitical Influence) இலங்கை சில சுயாதீன முடிவுகளை எடுக்க முடியாத நிலையை உருவாக்கும் (உதாரணம்:சர்வதேச வாக்கெடுப்புகள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள்).

இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது
கடன் பொறி (Debt Trap)ஆகும்.

"கடன் பொறி" (Debt Trap) என்பது, "ஒரு நாடு தொடர்ந்து கடன் எடுத்து, அதை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு செல்லும் பொருளாதார நெருக்கடி"யை இது குறிக்கும். 

கடன் பொறி எவ்வாறு செயற்படுகிறது என எளிமையாக நோக்கின்,ஒரு நாடு கடன் எடுக்கிறது (உதாரணம்: சீனாவிலிருந்து), அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை அல்லது காலம் நீண்டு செல்ல கடன் வாங்கிய நாடு கடனை அடைக்க அல்லது வட்டி கட்ட மீண்டும் புதிய கடன் எடுக்கிறது.வட்டி கூட செலுத்த முடியாமல் போனால்,மேலும் மேலும் கடன் எடுக்கிறது.இதன் விளைவாக இறுதியில் தனது சொத்துக்களை கடன் வழங்கிய நாட்டிடம் இழக்க நேரிடும்.

இதைதான் “கடன் பொறி” என்பார்கள்.
கடன் → கடனைத் திருப்ப செலுத்த முடியாமை → மேலும் கடன் → சிக்கல் மேலும் மோசமாகும்.

இந்த கடன் சிக்கலில் சிக்கிய நாடாக எமது நாடான இலங்கையை குறிப்பிடலாம். இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தலே விமானநிலையம் பெருந்தெருக்கள் போன்ற கட்டுமானங்களுக்கு சீனாவிடமிருந்து கடன் பெற்றது. ஆனால் இவற்றால் வருமானம் மிக குறைவாகவே வந்தது. கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் அதிக வட்டி மட்டும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக சொத்துகளை சீனாவிற்கு கொடுத்தது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

Debt Trap Diplomacyயில் சிக்கியதாகப் பொதுவாகக் கூறப்படும் சில நாடுகள்

அ) ஜிபூட்டி (Djibouti)
சீனாவின் கடன்கள் அதிகம் பெற்றது, அதனால் கடலோரத்தளங்களை சீனாவின் இராணுவத் தளம் அமைக்க கையளித்தது.

ஆ) லாவோஸ் (Laos)

சீனாவின் Belt and Road திட்டத்தில் கடன் எடுத்து, பல பாதை மற்றும் புகைவண்டி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு கடன் சுமை அதிகரித்து வருகிறது.

இ) மாலத்தீவுகள் (Maldives)

சீனாவிடம் இருந்து அடிக்கடி கடன்கள் வாங்கப்பட்டு, நாட்டின் பொருளாதார கட்டுப்பாடு குறித்து கவலை எழுந்துள்ளதுடன் பல முக்கிய சொத்துக்கள் சீன முதலீட்டாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஈ) பாகிஸ்தான் (Pakistan)

சீன-பாகிஸ்தான் பொருளாதார வழி (CPEC-China-Pakistan Economic Corridor) திட்டத்தினால் அதிக கடன்கள் ஏற்பட்டு, திருப்பிச் செலுத்த முடியாத அளவில் கடன் சுமை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உ) மொண்டெநீக்ரோ (Montenegro)

சீனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட கடன்களால், ஒரு முக்கிய மோட்டார் பாதை திட்டம் மிகுந்த நிதி சுமையை இந்த நாட்டிற்கு கொண்டு வந்ததுள்ளது

இவை தவிர, ஆப்ரிக்கா, ஆசியா, மற்றும் பசிபிக் தீவுகள் போன்ற பகுதிகளில் உள்ள பல நாடுகள் சீனவின் கடன் பொறியில் சிக்கியுள்ளன என்ற விமர்சனங்கள் உள்ளன.

இப்போது எமக்கு விளங்கக் கொள்ளக் கூடியதாக இருக்கும் "கடன் பொறி இராஜதந்திரம்" (“Debt Trap Diplomacy ஜீ” ) என்று உலகளவில் குறிப்பிடப்படுகிற ஒரு புதுமையான நிலை பற்றி.

அரசியலோ, போரோ இல்லாமல், நிதி வழியாக ஒரு நாட்டை கடனூடாக சுற்றி வளைக்கும் இராஜதந்திரம் இது. இதை தான் எமது முன்னோர் "இறால் போட்டு சுறா பிடிப்பது"எனக் கூறுவார்கள்.

ஒரு நாடு கடன் பொறியை (Debt Trap)ஐ எவ்வாறு தவிர்க்க முடியும்...

1. அதிரடி வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் அளவுக்கு மீறிய கடன்கள் எடுக்காமல் இருக்க வேண்டும்.

2. சுயநிறைவு கொண்ட வருவாய் திட்டங்களை நாடுகள் உருவாக்க வேண்டும்.

3. நாட்டின் சொத்துகளை உறுதியாக வைத்திருக்கும் சட்ட பாதுகாப்பு இங்கு மிக அவசியம்.

4. பல நாடுகளிடமிருந்து சமமான அளவில் நிதி உதவிகளைப் பெறுவது நல்லது – ஒரு நாட்டிடம் அதீத நம்பிக்கை காரணமாக முழுமையாக சென்று சிக்காமல் இருக்கவேண்டும்.

எமது அண்டைய நாடான இந்தியா – Debt Trap Diplomacy-ஐ எப்படி தவிர்க்கிறது எனப் பார்ப்பது இங்கு அவசியம்.

அ. பரந்த முதலீட்டு உடன்பாடுகள் (Diversified Partners) மூலம் இந்தியா சீனாவை மட்டுமல்லாமல் Japan, USA, European Union, Middle East போன்ற பல நாடுகளுடனும் முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுகின்றது.

இது ஒரு குறித்த நாட்டின் மீதான சார்பை குறைக்க உதவுகிறது.

ஆ. திட்ட மதிப்பீட்டு (Project Evaluation) அபிவிருத்தி மூலம் கடன் தேவையை தீர்மானிக்கிறது.வர்த்தக ரீதியாக பயனற்ற திட்டங்களை இந்தியா தற்போது சீராக மதிப்பீடு செய்கிறது. அதாவது – ROI (Return on Investment) பார்க்கப்படுகின்றது. (ROI என்பது, ஒரு திட்டத்தில், வர்த்தகத்தில் அல்லது முதலீட்டில் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு மீளப்பெறும் பலனை (return) கூறும் ஒரு சதவீத மதிப்பு.)

இந்தியா "வளர்ச்சி" என்ற பெயரில் "நஷ்டம் தரும் பாரிய திட்டங்களில்" முதலீடு செய்வது குறைவு.

இ. திட்டங்களை Public-Private Partnership (PPP) முறையில் செயல்படுத்துகின்றது அதாவது அரசு சார்பில் அல்லாமல், தனியாரும் பங்கேற்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன – இதனால் தேறிய அரச கடன் சுமை குறையும்.

ஈ. மத்திய வங்கியினால் கண்காணிப்பு (RBI) மேற்கொள்ளப்படுகின்றது.வெளிநாட்டு கடன்கள் எவ்வளவு?,எந்த நோக்கில்?, யாரிடமிருந்து? என்பதை RBI முறையாக கண்காணிக்கிறது.

இதன் மூலம் இந்தியா கடன் பொறியில் சிக்காமல் இருந்து வருகின்றது. ஆனால் இலங்கை – Debt Trap Diplomacyயின் மிகவும் குறிப்பிடத்தக்க, உலகளவில் பேசப்பட்ட நாடாக காணப்படுகின்றது.RMB-யில் கடன்கள், இலாபமில்லாத பாரிய திட்டங்கள்(mega projects) மற்றும் சொத்து ஒப்படைப்பு ஆகியவை அதன் நிதி தன்னாட்சியை வெகுவாக பாதித்தன என்பது இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று.

இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் யாதெனில்,RMB-யின் நிலைத்தன்மை குறைவு அதாவது, சீனாவின் நாணயத்தை அரசு கட்டுப்படுத்துவதால், மற்ற நாடுகளால் இந்த நடவடிக்கையை முழுமையாக நம்ப முடியவில்லை என்பதுடன் RMB உலக ஒழுங்கை மாற்றும் சக்தியாக மெல்ல, ஆனால் தெளிவாக உருவெடுக்கிறது என்பதும் இது அமெரிக்க டாலரின் வலிமையையும், மேலைத்தேய மத்திய உலகலாவிய நிதி ஒழுங்கையும் (Western-centric global financial system) சவாலுக்கு உட்படுத்துகின்றது என்பதும் நிதர்சனம்.

"I checked my wallet and found some RMB. I guess I'm officially part of the Chinese economy now!"

நா.இராஜமனோகரன்
13 April 2025